News April 8, 2025
வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

வங்கிகளுக்கு வருகிற 10ஆம் தேதி (11ஆம் தேதி தவிர) முதல் 4 நாட்கள் விடுமுறை ஆகும். 10ஆம் தேதி மகாவீரர் ஜெயந்திக்கு வங்கிகளுக்கு விடுமுறை. 12ஆம் தேதி 2-வது சனிக்கிழமை வருவதால் அன்றும் விடுமுறை. 13-ம் தேதி ஞாயிறு. 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு. அதனால் அந்த 2 நாட்களும் விடுமுறை. மேற்கண்ட 4 நாட்களிலும் வங்கிகள் திறக்கப்படாது. இணைய வங்கி சேவை இருக்கும். இதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளவும்.
Similar News
News November 21, 2025
இந்தியா – பாக்., மோதலில் டிரம்ப் புது தகவல்

இந்தியா – பாக்., மோதலை வரி விதிப்பை சுட்டிக்காட்டி தானே தீர்த்து வைத்ததாக USA அதிபர் டிரம்ப் 60-வது முறையாக கூறியுள்ளார். அதிலும் இம்முறை, 350% வரி விதிக்கப்படும் என எச்சரித்ததும், நாங்கள் (இந்தியா) போருக்கு போவதில்லை என்று PM மோடி தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, டிரம்ப்பின் தொடர்ச்சியான மத்தியஸ்தம் குறித்த பேச்சை <<18336352>>காங்.,<<>> கிண்டலடித்திருந்தது.
News November 21, 2025
காதல் பறவைகளுக்கு வாழ்த்து கூறிய மோடி..!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை நவ.23-ல் கரம்பிடிக்கிறார். அவர்களுக்கு <<18342884>>நிச்சயதார்த்தம்<<>> நடந்ததையொட்டி, வாழ்த்து தெரிவித்து PM மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், இரு சாதனை நபர்களின் சங்கமம் என பாராட்டு தெரிவித்த அவர், இந்த ஜோடி தங்களது பயணத்தில் சுற்றியுள்ளவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
News November 21, 2025
அனில் அம்பானியின் ₹1,400 கோடி சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அனில் அம்பானி & அவர் தொடர்புடைய நிறுவனங்கள் மீது ED விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று அனில் அம்பானிக்கு தொடர்புடைய ₹1,400 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை ED முடக்கியுள்ளது. இதுவரை ₹9,000 கோடி அளவிலான சொத்துகளை ED முடக்கியுள்ளது. அதேநேரம், இதுவரை 2 முறை சம்மன் அனுப்பப்பட்டும், அனில் ED அலுவலகத்தில் ஆஜராகவில்லை.


