News May 18, 2024

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 4.24 லட்சம் புகார்

image

தேர்தல் விதிமீறல் உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்க சி.விஜில் என்ற செயலியை EC ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 4.24 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 4,23,908 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், தற்போது 409 புகார்கள் மட்டுமே விசாரணையில் உள்ளதாகவும், 89% புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டதாகவும் EC தெரிவித்துள்ளது.

Similar News

News March 7, 2026

வேட்புமனுவை வாபஸ் வாங்கினார் சௌமியா

image

அன்புமணி ராஜ்யசபா எம்பியாக தேர்வாகவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை வாபஸ் வாங்கிய சௌமியா, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 7, 2026

ஈரான் போர்.. இந்தியாவில் இதன் விலை குறைகிறது

image

இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியில் 72% மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது அங்கே போர்ச்சூழல் நிலவுவதால் 2 லட்சம் டன் பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலிருந்து கப்பல்களில் கொண்டுசெல்லப்பட்ட மேலும் 2 லட்சம் டன் அரிசியும் பாதிவழியிலேயே நிற்கிறதாம். இதன் காரணமாக இந்தியாவில் அதன் விலை 7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் குறையலாம்.

News March 7, 2026

விலை உயராது.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹114.50-ம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹60-ம் உயர்ந்தது. சிலிண்டர் உயர்வால், டீ, காபி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டீ, காபிகளின் விலை உயராது என்று பெருநகர டீக்​கடை உரிமை​யாளர்​கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!