News December 11, 2024
4 யூனிட் மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்

கரூர் மாவட்டம் வெள்ளப்பட்டி கிராமம் விஏஓ இராஜகேசவன் நேற்று பாரப்பட்டியில் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அவ்வழியே வந்த லாரியை சோதனை செய்தபோது எம்.சாண்டுக்கான உரிமம் பெற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. விஏஓ புகாரின் பேரில் கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் அணையை சேர்ந்த பிரசாந்த் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து 4 யூனிட் மணலுடன் லாரி பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 11, 2025
கரூர்: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

கரூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News November 11, 2025
கரூர்: இனி EB OFFICE செல்ல வேண்டாம்

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 11, 2025
கரூர்: முதியவரிடம் 7 பவுன் தங்கச் செயின் பறிப்பு

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மொபட்டில் சென்ற முதியவர் கருணாநிதி (67) என்பவரிடம் மூன்று மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து, 7 பவுன் தங்கச் செயினை பறித்து தப்பினர். சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


