News December 22, 2025
4- ஆவது நாளாக தொடரும் செவிலியர் போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கிறிஸ்டி பொன்மணி, இரஞ்சிதா, இராம்பிரியா ஆகியோர் தலைமையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நான்காவது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
மானாமதுரை: ரயிலில் அடிபட்டு ஒருவர் கொடூர பலி

மானாமதுரை இரும்பு பாதை காவல் நிலையத்திற்குட்பட்ட சூடியூர் ரயில் நிலையத்திற்கும் பரமக்குடி இரயில் நிலையத்திற்கும் இடையே இன்று 25.12.25 சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தாம்பரம் – இராமேஸ்வரம் செல்லும் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை .தகவல் தெரிந்தால் 94981-01993 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
News December 25, 2025
சிவகங்கை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
சிவகங்கையில் 21,545 பேர் பாதிப்பு.!

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு. இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


