News March 28, 2024
4 வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலி

சேத்துப்பட்டு – ஆரணி நெடுஞ்சாலையில் நேற்று மட்டும் 4 வெவ்வேறு இடங்களில் காலை விபத்துகளில் 5 பேர் பலி. செஞ்சி பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார், மேல் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரர் , வெங்கடேசன், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த துளசி, இடையகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Similar News
News November 22, 2025
தி.மலை: B.Sc, B.E, B.Tech, B.Com, BBA படித்தவரா நீங்கள்?

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA., 3. கடைசி தேதி : 14.12.2025, 4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26, 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 22, 2025
தி.மலை: தொடரும் அவலம்; அலைக்கழிக்கப்படும் மக்கள்!

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார், சாதிச் சான்று உள்ளிட்ட சேவைகளை பழங்குடியின மக்கள் பெறும் வகையில் SC/ST நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஆதார் பெற வந்த இருளர் மக்களிடம், ஆதார் எடுக்க பிறப்பு சான்றிதழ் தேவை என கூற, ஆதார் எடுக்கவில்லை. இதனால், தங்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாமல் ஆதார் வழங்க கோரி, தர்ணாவில் ஈடுபட்டனர்.
News November 22, 2025
தி.மலை: அரசு பேருந்து மோதியதில் நொறுங்கிய கார்!

ராணிப்பேட்டை மாவட்ட வட்டாட்சியர்கள் அருள்செல்வன், ஆனந்தன், தமிழரசி, வெங்கடேசன் ஆகியோர் தி.மலைக்கு அலுவல் காரணமாக வந்துவிட்டு, சோளிங்கர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆரணி அருகே அரசு பேருந்து கார் மீது மோதியதில், விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த பூபாலன் பலத்த காயமடைந்தார். வட்டாட்சியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆரணி கிராமிய போலீசார் விசாரிக்கின்றனர்.


