News March 28, 2024

4 வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலி  

image

சேத்துப்பட்டு – ஆரணி நெடுஞ்சாலையில் நேற்று மட்டும் 4 வெவ்வேறு இடங்களில் காலை விபத்துகளில் 5 பேர் பலி. ‌செஞ்சி பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார், மேல் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரர் , வெங்கடேசன், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த துளசி, இடையகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Similar News

News September 17, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (செப்:16) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News September 16, 2025

மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தவெகவினர் மனு

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நவம்பர்-8 ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூர், வந்தவாசி, செய்யார், திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கிழ்பென்னத்தூர் ஆகிய அனைத்து இடங்களிலும் சுற்றுபயணம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் பாரதி, சத்யா, கதிரவன், உதயகுமார் ஆகியோர் இன்று செப்டம்பர்.16 மனு அளித்தனர்.

News September 16, 2025

தி.மலை: குழந்தை வரம் தரும் அற்புத தலம்

image

போளூர் அருகே இயற்கை எழில் சூழ்ந்த சம்பந்தகிரி மலைகளுக்கு அருகே அருணகிரிநாதரால் போற்றிப்பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. குறிப்பாக இத்தலத்தில் பத்து நாள் திருவிழாவாக நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவில் ஸ்ரீ பால முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தில் ஐதீகமாகவே உள்ளது. இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!