News April 5, 2025
4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

முகப்பேர் பகுதியில், 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என உறுதியளித்தனர்.
Similar News
News November 23, 2025
டிச.10தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிச.10ம் தேதி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
சென்னையில் நாய் கைவிடுதல் அதிகரிப்பு

சென்னையில் கட்டாய நாய் மைக்ரோசிப்பிங் காலக்கெடு நெருங்குவதால், செல்லப்பிராணிகளை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி.சி.சி.யின் புதிய செல்லப்பிராணி உரிம விதிகள் மற்றும், ரூ.5,000 அபராதம் குறித்து மக்களிடம் உள்ள குழப்பம் இதற்கு காரணமாக உள்ளது. நவம்பர் 24 என அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி தற்போது டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?
News November 23, 2025
சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம்!

சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, இத்திட்டத்திற்கான இறுதிக்கள அறிக்கையில் (DPR) சேர்க்கப்படவுள்ள வழித்தட வரைபடத்தை தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தப்படும். அடுத்த மாதத்தில் முடிவு தெரியவரும். மேலும், ஆய்வுப் பணிகளைத் தொடர தேவையான ஒப்புதல்களையும் கோரியுள்ளது.


