News September 9, 2025
தமிழ்நாட்டில் இருந்து 3-வது துணை ஜனாதிபதி

நாட்டிற்கு அதிக துணை ஜனாதிபதிகளை வழங்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இன்றைய துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற நிலையில், இதுவரை 3 துணை ஜனாதிபதிகளை தமிழகம் வழங்கியுள்ளது. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன், 1952 முதல் 1962 வரை 10 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அடுத்ததாக, ராமசாமி வெங்கட்ராமன் 1984 முதல் 1987 வரை அப்பதவி வகித்தார்.
Similar News
News September 10, 2025
அன்னை தெரசா பொன்மொழிகள்

*தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மிகவும் மோசமான வறுமையாகும். *ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை. *சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், ஏனென்றால் அதில்தான் உங்களது வலிமை உள்ளது. *உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள். *மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.
News September 10, 2025
நேபாளில் ராணுவ ஆட்சி

நேபாள் நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை கண்டித்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நேபாள் ஜனாதிபதி, PM ராஜினாமா செய்தனர். நாடாளுமன்றம், அமைச்சர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நேபாள் ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது.
News September 10, 2025
‘96 பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில்

ரசிகர்கள் யாரும் எதிர்பாராத கூட்டணியாக இயக்குநர் பிரேம்குமார், பஹத் பாசில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது ஆக்ஷன் த்ரில்லர் படம் எனவும் தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரேம்குமார் கூறியுள்ளார். ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும், விக்ரமுடனான படத்திற்கு திரைக்கதை எழுத வேண்டியிருப்பதாக பிரேம்குமார் தெரிவித்தார்.