News March 28, 2025
39 மனைவிகள்… 94 பிள்ளைகள்… அம்மாடியோவ்…!

ஒரு பொண்டாட்டிய வச்சே சமாளிக்க முடியல என ரொம்ப பேர் பொலம்புறத பாத்துருப்போம். ஆனா, 39 மனைவிகளோட ஒருத்தர் வாழ்ந்திருக்காரு. அதுவும் இந்தியாவுல. மிசோரமைச் சேர்ந்த சியோனா சானாதான் அது. உலகின் மிகப்பெரிய குடும்பத்துக்கு சொந்தக்காரரான அவரு, 39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரப்பிள்ளைகளோட ஒன்னா வாழ ஒரு அரண்மனையையே கட்டிருக்காரு. செழிப்பா வாழ்ந்த மனுஷன், 2021ம் வருஷம் ரத்த சோகை நோயால இறந்துட்டாராம்.
Similar News
News March 31, 2025
ஏப்ரலில் வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை

ஏப்ரலில் வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை. ஏப். 1 வருட கடைசி கணக்கு நிறைவு நாள் என்பதால் விடுமுறை. ஏப்.10 மகாவீர் ஜெயந்தி, ஏப். 14 தமிழ் புத்தாண்டு, ஏப். 18 புனித வெள்ளி ஆகும். இந்த நாட்களிலும், ஏப்ரல் 6, 12, 13, 20, 26, 27 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால் அன்றைய நாள்களும் விடுமுறை ஆகும். இந்த 10 நாள்களும் வங்கிகள் திறந்திருக்காது. இதை வைத்து திட்டமிட்டு வங்கி செல்லுங்கள்.
News March 31, 2025
சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி… எதில் தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் கொண்ட அணி என்ற சாதனையை நீண்டகாலமாக சிஎஸ்கே தன்வசம் வைத்திருந்தது. தற்போது அதனை ஆர்சிபி கைப்பற்றியுள்ளது. 17.8 மில்லியன் பாலோயர்ஸ் உடன் ஆர்சிபி முதலிடத்தில் உள்ளது. 17.7 மில்லியன் பாலோயர்ஸ் உடன் சிஎஸ்கே இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனா, இதுக்கெல்லாம் கப்பு தரமாட்டாங்க என சிஎஸ்கே ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
News March 31, 2025
அஜித்துடன் 100 நாட்கள்… ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி!

ஏப்.10-ல் வெளியாகும் குட் பேட் அக்லி படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அஜித்துடன் பணியாற்றியது குறித்து ஆதிக் மனம் திறந்துள்ளார். அஜித் தனது வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், அவருடன் பணியாற்றிய 100 நாள்களும் அவரது படத்தின் FDFS பார்த்த அனுபவம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அஜித் தூய்மையான இதயம் கொண்டவர் என்றும் ஆதிக் தெரிவித்துள்ளார்.