News April 15, 2024
39 பந்துகளில் சதம்… புதிய சாதனை

RCB அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் SRH வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் IPL வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 4 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கெயில் 30, யூசுப் பதான் 37, டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதம் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் பறக்கவிட்டு நடப்பு தொடரில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்துள்ளார் ஹெட்.
Similar News
News December 1, 2025
BREAKING: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. இதேபோல், நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலை., தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
திமுகவின் குளறுபடியால் மாணவர்கள் அவதி: அன்புமணி

சென்னையில் இன்று கனமழை பெய்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் கலெக்டர்களுக்கு மாற்றப்பட்டது தான் குழப்பங்களுக்கு காரணம் என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். பள்ளிகளுக்கு லீவ் கொடுக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியிறுத்தியுள்ளார்.
News December 1, 2025
எப்படி சுனாமி வருகிறது?

கடலுக்கு அடியில் உள்ள டெக்டானிக் பிளேட்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனால், கடல் சீற்றமடைந்து சுனாமி உருவாகிறது. பொதுவாக ரிக்டர் அளவில் 8.0 மேல் பூகம்பம் பதிவானால் மட்டுமே பெரியளவில் சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சுனாமி வருவதற்கு முன் கடல் நீர் 100-200 அடிகள் வரை உள்நோக்கி இழுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE.


