News April 15, 2024

39 பந்துகளில் சதம்… புதிய சாதனை

image

RCB அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் SRH வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் IPL வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 4 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கெயில் 30, யூசுப் பதான் 37, டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதம் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் பறக்கவிட்டு நடப்பு தொடரில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்துள்ளார் ஹெட்.

Similar News

News December 5, 2025

ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெறவுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சிறப்பு தரிசன டிக்கெட்களுக்கான (₹300) முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படும். டிக்கெட்களை பெற <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

News December 5, 2025

பார்லிமென்ட்டை முடக்கிய தமிழக MP-க்கள்!

image

இன்று லோக்சபா தொடங்கியது முதலே <<18473828>>திமுக MP-க்கள்<<>> திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச வேண்டுமென அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பேசுவதற்கு அனுமதி மறுத்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ‘நீதி வேண்டும்’ என தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, ராஜ்யசபாவிலும் அமளியில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி MP-க்கள், வெளிநடப்பு செய்தனர்.

News December 5, 2025

ஜெயலலிதா நினைவிடத்தில் முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்

image

தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என ஓபிஎஸ் தனது முடிவை அறிவித்துள்ளார். மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவருடன் பேசவில்லை எனவும் தடாலடியாக கூறியுள்ளார். முன்னதாக வரும் 15-ம் தேதி தனிக்கட்சி குறித்த அறிவிப்பை OPS வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!