News May 21, 2024

 38 சக்கர நாற்காலிகள் வழங்கல்

image

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் (CSR)நாகர்கோவில் மாநகராட்சிக்கு 38 சக்கர நாற்காலிகள் ஸ்பான்சர் செய்துள்ளது. வங்கியின் பொது மேலாளர் அசோக்குமார், PD&RM துறை ராஜா, திருவனந்தபுரம் மண்டல மேலாளர் ராம்குமார், மார்க்கெட்டிங் அலுவலர் சிவசங்கர், நாகர்கோவில் கிளை மேலாளர்,தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் வழங்கினார்.

Similar News

News December 1, 2025

தூத்துக்குடி: வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி 95% நிறைவு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணி நவம்பர் 4ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் எளிதில் படிவங்களை நிரப்பி தருவதற்கு வசதியாக சிறப்பு முகாம்களும் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி முடிவடைந்துள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News December 1, 2025

தூத்துக்குடி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

image

தூத்துக்குடி மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <>க்ளிக்<<>> செய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடுங்கள் என்பதை தேர்ந்தெடுத்து பெயர், எந்த சட்டமன்ற தொகுதியில் கடைசியாக வாக்களத்தீர்கள் போன்ற விவரங்களை சரியாக பூர்த்தி செய்தால் உங்க VOTER ID கிடைச்சுடும். அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

கோவில்பட்டியில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

image

விருதுநகர் பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (65), உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு, கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!