News February 23, 2025

365 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

image

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணிகளை ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த பரமத்தி வேலூர் பாப்பன தோட்டத்தை சேர்ந்த ராமசாமியை சோதனை புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து குந்தாணி பாளையத்தில் உள்ள ராமசாமி வீட்டின் காரில் 365 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், ராமசாமியையும் வேலாயுதம் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2025

வாழ்வில் ஏற்றம் தரும் கல்யாண விகிர்தீஸ்வரர்

image

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 20, 2025

கரூர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு 

image

கரூர்- திருச்சி பிரிவில் உள்ள கரூர்-வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) நாளை மறுநாள் கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 20, 2025

கரூரில் இலவச விளையாட்டு பயிற்சி

image

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கையுந்து பந்து, ஜூடோ,கூடைப்பந்து, கபடி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான இலவச கோடைக்கால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகட்திற்கு நேரடியாகவோ அல்லது 7401703493 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

error: Content is protected !!