News February 8, 2025

3,63,936 பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் பிப்.10 முதல் குடல்புழு நீக்கும் தேசிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிப்.17ல் விடுபட்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படும். 3,63,936 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2,127 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஊர்திகள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

Similar News

News August 21, 2025

தி.மலை மக்களே இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா

image

கடந்த ஆண்டு 30 பேர் தி.மலை மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2000 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டு, 8 பேருக்கு தொழுநோய் உறுதி செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தீவிர தொழுநோய் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொழுநோயை பற்றி தெரிந்து கொள்ள இங்கு <<17469663>>கிளிக்<<>> பண்ணுங்க.

News August 21, 2025

தி.மலை: தொழுநோய் அறிகுறிகள்

image

தோலில் நிறமாற்றம், உணர்ச்சியற்ற தேமல், தோல் தடித்து காணப்படுதல், தோல் பளபளப்பாக இருத்தல் அல்லது எண்ணெய் பூசியது போல் இருத்தல் போன்றவை இதன் அறிகுறிகள். அறிகுறிகள் தென்பட்டால் பயம் கொள்ளாமல் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகள் மூலம் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிகிச்சை பெற்று குணமடையலாம். *ஷேர் பண்ணுங்க. முன்னதாகவே தற்காத்து கொள்வது சால சிறந்தது*

News August 21, 2025

தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அதன் விவரம் மேலே உள்ள படத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, வாரிசு, வருமானம், இருப்பிடம், சாதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!