News March 10, 2025
36 வழக்குகளுக்கு சமரச தீர்வு

அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி செல்வன் ஜேசு ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஜீவனாம்ச வழக்குகள் காசோலை வழக்குகள் என 250 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. அவற்றில் நிலுவையில் உள்ள 36 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இழப்பீடு தொகையாக ரூ 68,51,500 பெற்று தரப்பட்டதாக செய்தி குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News April 21, 2025
பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(41). இவர் அப்பகுதியில் ஏப்.17 அன்று நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்திய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் பலத்த தீக்காயமடைந்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
News April 20, 2025
10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-40, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
News April 20, 2025
விருதுநகர்: திரைப்படங்கள் காண ஆட்சியர் அழைப்பு

விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க விருதுநகர், ஸ்ரீவி,ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் ஏப்.25 முதல் மே.01 வரை சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற எண்ணில் அழைக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.