News June 2, 2024
36 நிறுவனங்களுக்கு அபராதம்

சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளா்கள் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், வணிக நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 36 நிறுவனங்களில் இருந்து முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், எடைக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது.
மூட்டைகளை எடை போடும் ‘பிளாட்பாா்ம் ‘ தராசுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் கட்டாயம் மறு முத்திரை இட வேண்டும் தொழிலாளா் நலன், ஆணையா் முத்து கூறினார்
Similar News
News April 21, 2025
அரசு பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(70). நேற்று திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது காரைக்குடியில் இருந்து தேனி செல்வதற்காக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 20, 2025
சிவகங்கை: டிரைவர் காலிப்பணியிடம் அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி ஏப்.30. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. <
News April 20, 2025
சிவகங்கை : அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 185 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <