News March 26, 2024

ஒரே நாளில் 350 பேர் வேட்பு மனு தாக்கல்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 471 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மார்ச் 20இல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் 350 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளையுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிகிறது.

Similar News

News April 19, 2025

வாரண்டி தொடர்பான வழக்கில் நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

image

திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் டிவி வாரண்டி தொடர்பாக 23.07.2024 அன்று தொடர்ந்த வழக்கில், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் டிவி நிறுவனம் கார்த்திக்கு 45 நாட்களுக்குள் பழைய டிவியை எடுத்துக் கொண்டு புதிய டிவி (அ) டிவியின் விலையான ரூ.1,49,099 பணத்தை வழங்க வேண்டும். மேலும் நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

News April 19, 2025

MBBS தமிழில் படிக்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

image

மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதே சமயம் இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால், அது குறித்து தேசிய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News April 19, 2025

அதிமுகவில் இணைந்த தவெக மாவட்ட பொறுப்பாளர்!

image

TVK ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முள்ளிமுனை P.P.ராஜா அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனை, ADMK IT விங் பதிவிட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், அவரது கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், கட்சிப் பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார் கூறுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!