News October 25, 2024

35 மாணவர்கள் ஹாஸ்பிட்டலில் அனுமதி

image

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவால் 35 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயு கசிந்ததால் பள்ளியின் 3ஆவது தளத்தில் இருந்த மாணவர்கள் ஒவ்வொருவராக மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர். இதனையடுத்து, அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Similar News

News September 14, 2025

BREAKING: திமுகவில் நடிகருக்கு முக்கிய பொறுப்பு

image

திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவராக நடிகர் போஸ் வெங்கட் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்து MP தமிழச்சி தங்கபாண்டியன் கல்வியாளர் அணி செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதால் போஸ் வெங்கட் இப்பொறுப்புக்கு வந்துள்ளார். இதற்கு CM ஸ்டாலின், DCM உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ள போஸ் வெங்கட், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வது உறுதி எனவும் கூறியுள்ளார்.

News September 14, 2025

பேரழகான டாப் 5 இந்திய ரயில் நிலையங்கள்

image

‘அழகு’ என்பது மனிதரில் மட்டுமல்ல, நாம் காணும் அனைத்திலும் உள்ளது. அதிலும் பயணம் என்பது அனுபவம் கலந்த அழகு. குறிப்பாக, ரயில் பயணம், நமது மனதை அதிகமாகவே அழகாக்கிறது. அந்த வகையில், ரயில் நிலையங்களும் அழகாக இருந்தால் பயணம் பேரழகாகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள டாப் 5 அழகான ரயில் நிலையங்களை மேலே Swipe செய்து பாருங்கள். அதை பார்த்ததும் உங்களுக்கு தோன்றும் கவிதையை கமெண்ட்டில் எழுதுங்கள்.

News September 14, 2025

பசுவை விலங்காக கூட கருதுவதில்லை: மோடி

image

நாட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் பசுவை விலங்காக கூட கருதுவதில்லை என PM மோடி கூறியுள்ளார். இதனை, விலங்குகள் மீதான ஆர்வலர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கறை என்றும் PM குறிப்பிட்டார். நாடு முழுவதும் தெருநாய்கள் விவகாரம் விவாதமாகியுள்ள நிலையில், மோடியின் இந்த பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!