News February 16, 2025
35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் கைது

ஒசூரில் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிபொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் சிப்காட் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், வீட்டிற்கு இணைப்பு வழங்க அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் வாரிய பொறியாளர் சிவகுரு மற்றும் வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 9, 2026
BREAKING: கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70வயது முதியவர், நள்ளிரவில் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
News March 9, 2026
கிருஷ்ணகிரி மாவட்டம்- ஓர் பார்வை!

1. நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
2. மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
3. பேரூராட்சிகள்- 06
4. வருவாய் கோட்டம்- 2
5. தாலுகா-8
6. வருவாய் வட்டங்கள் – 8
7. வருவாய் கிராமங்கள்-636
8. ஊராட்சி ஒன்றியம்-10
9. கிராம பஞ்சாயத்து- 333
10. MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
11. MLA தொகுதி- 6
12. மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News March 9, 2026
கருணாநிதியே தோற்ற கோட்டை இது! – கே.பி.முனுசாமி கண்டனம்!

தேர்தலுக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளரை பா.ஜனதா மாற்றும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்திற்கு கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கருணாநிதியே முயன்று தோற்ற நிலையில், தேர்தல் பயத்தில் ஸ்டாலின் ஒற்றர் வேலை பார்க்கிறார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட அவருக்கு உரிமையில்லை; எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதி” என, நேற்று நடந்த பெட்டியில் அவர் தெரிவித்தார்.


