News February 16, 2025
35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் கைது

ஒசூரில் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிபொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் சிப்காட் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், வீட்டிற்கு இணைப்பு வழங்க அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் வாரிய பொறியாளர் சிவகுரு மற்றும் வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 22, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு!

கிருஷ்ணகிரி, இரவு ரோந்து செலும் காவலர்கள் 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரி, கட்டையான பல நூலக மைதானத்தில் நாளை (நவ.23) இயற்கை விவசாயிகள் நடத்தும் 194வது மரபுச் சந்தை நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், தானியங்கள், பசு நெய், தேன், அவல், ஊறுகாய், சிறு தானியங்களால் செய்த கேக், மருந்தில்லாமல் விளையும் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
News November 22, 2025
கிருஷ்ணகிரி: இலவச பட்டா வேண்டுமா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


