News March 12, 2026

349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. இன்றே கடைசி!

image

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <>upsc.gov.in<<>> தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். சம்பளமாக ₹57,000 – ₹1.77 லட்சம் வரை கிடைக்கும். SHARE.

Similar News

News March 30, 2026

சமயபுரம் துயரம்.. திமுக அரசை சாடிய அண்ணாமலை

image

சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து பக்தர் உயிரிழந்தது கவலையளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். அங்கு கும்பாபிஷேக பணிகள் முடிந்து 4 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், மேற்கூரை இடிந்து விழுவது எந்த லட்சணத்தில் ஆலய திருப்பணிகளை திமுக அரசு மேற்கொள்கிறது என்பதற்கு உரிய சான்று என X-ல் அவர் விமர்சித்துள்ளார். இதில், பக்தர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய சேகர்பாபு, பதில் சொல்லி ஆக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 30, 2026

US வீரர்கள் சுறாவுக்கு இரையாக மாறுவார்கள்: ஈரான்

image

போர்க்களத்தில் டிரம்ப்பை ஒரு பகடைக்காயாக இஸ்ரேல் PM நெதன்யாகு பயன்படுத்தி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. எப்ஸ்டீன் பைல்ஸில் டிரம்ப் சிக்கி உள்ளதால், அவருக்கு மொசாட் அமைப்பு அழுத்தம் கொடுப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. தரைப்படையை அனுப்பி சில தீவுகளை கைப்பற்றுவேன் என டிரம்ப் கூறும் நிலையில், அவ்வாறு நடந்தால் பாரசீக வளைகுடாவில் US வீரர்கள் சுறாவுக்கு இரை ஆவார்கள் என்றும் ஈரானிய படைகள் எச்சரித்துள்ளன.

News March 30, 2026

US வீரர்கள் சுறாவுக்கு இரையாக மாறுவார்கள்: ஈரான்

image

போர்க்களத்தில் டிரம்ப்பை ஒரு பகடைக்காயாக இஸ்ரேல் PM நெதன்யாகு பயன்படுத்தி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. எப்ஸ்டீன் பைல்ஸில் டிரம்ப் சிக்கி உள்ளதால், அவருக்கு மொசாட் அமைப்பு அழுத்தம் கொடுப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. தரைப்படையை அனுப்பி சில தீவுகளை கைப்பற்றுவேன் என டிரம்ப் கூறும் நிலையில், அவ்வாறு நடந்தால் பாரசீக வளைகுடாவில் US வீரர்கள் சுறாவுக்கு இரை ஆவார்கள் என்றும் ஈரானிய படைகள் எச்சரித்துள்ளன.

error: Content is protected !!