News August 2, 2024
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
20 தொகுதிகளை குறிவைக்கும் DMK, ADMK

2021 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகளில் அதிமுக, திமுக கவனம் செலுத்துகின்றன. தென்காசி, மொடக்குறிச்சி, தி.நகர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் ADMK – DMK இடையே வெறும் 1000-க்குள் தான் வாக்கு வித்தியாசம். அதேபோல், தாராபுரம், கோவை தெற்கு உள்ளிட்ட 10 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 2000-க்குள். இதனால், இந்த 20 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இரு கட்சிகளும் உள்ளன.
News November 16, 2025
₹44.34 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்

அவதூறு விவகாரத்தில் டிரம்ப்பிடம் <<18247624>>பிபிசி மன்னிப்பு<<>> கோரியிருந்தது. இருப்பினும், இவ்விவகாரத்தில் அந்நிறுவனத்தை டிரம்ப் சும்மா விடுவதாக இல்லை என தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், பொதுமக்களை ஏமாற்றியதற்காக பிபிசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தன் கடமை என கூறியுள்ளார். மேலும், அவர்களிடம் ₹44.34 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்கும் முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News November 16, 2025
SIR பணிகளில் திமுக தலையிடுகிறது: அதிமுக

SIR பணிகளை, திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. SIR படிவங்கள் மூலம் பிற கட்சி வாக்குகளை நீக்குவதாகவும், அதிகாரம் & பண பலத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து திமுக இதை செய்வதாகவும் சாடியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.


