News August 2, 2024
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
உடல் எடையை குறைக்க 5 நிமிடங்கள் இத பண்ணுங்க!

ஓட்டப்பயிற்சி செய்வதால் கால்கள் & உடலின் மேல் பகுதி தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைத்து, உடலின் எடை குறைப்பிற்கு உதவுகிறது. இந்த ஸ்பாட் ரன்னிங் என்பது மிகவும் எளிதானது. நின்ற இடத்தில் இருந்தபடியே ஓடுங்கள். ஆனால், ஓடும்போது கால் முட்டியை, முடிந்தளவு நன்றாக மேலே மடக்குங்கள். உடல் எடையை குறைப்பதற்கு இது ஒரு பெஸ்ட் பயிற்சியாகும். ஆரம்பத்தில் 5 நிமிடங்கள் வரை ஓட்டப்பயிற்சி செய்யலாம்.
News November 9, 2025
மத பிரச்னைகளை தூண்டும் திமுக: நயினார்

TN-ல் குற்றங்களை தடுக்காமல், திமுக அரசு மத பிரச்னைகளை தூண்டி விடுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் மொழி, தமிழர்களின் உரிமைகளை வெறும் அரசியல் கருவியாக மட்டுமே திமுக கருதுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், தமிழர் உரிமைகள் குறித்து பேசும் திமுக, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்ததே அது என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 9, 2025
+2 தேர்வு: வருகைப்பதிவை பொறுத்தே ஹால்டிக்கெட்

பள்ளிக்கு முறையாக வரும் +2 மாணவர்களுக்கே ஹால்டிக்கெட் தர பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. முன்னதாக பள்ளிக்கு குறைவான நாட்களே வந்தாலும், அவர்களின் எதிர்கால நலனுக்காக ஹால்டிக்கெட் தரப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, 2026-ல் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என கல்வித்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.


