News August 2, 2024
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
காலையிலேயே பரபரப்பான சென்னை.. துப்பாக்கிச்சூடு

சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே நண்பர்களுடன் பதுங்கியிருந்த விஜயகுமாரை கைது செய்ய சென்றபோது, போலீசாரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து தற்காப்புக்காக விஜயகுமாரை காலில் சுட்டுப்பிடித்த போலீசார், அவரின் கூட்டணியான கவுதம், நிரஞ்சன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
News November 22, 2025
திடீரென மனம் மாறிய டிரம்ப்!

நியூயார்க் மேயர் <<18203048>>மம்தானிக்கும்<<>>, டிரம்ப்புக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துக்கொண்டனர். இச்சந்திப்பை அடுத்து, நியூயார்க் வளர்ச்சிக்கும் தேவையானவை செய்து தரப்படும் எனவும், மம்தானி சிறந்த மேயராக இருப்பார் எனவும் டிரம்ப் புகழ்ந்துள்ளார். நேற்று வரை எதிரும் புதிருமாய் இருந்த இவர்கள் இப்படி இணக்கம் காட்டுவது எப்படி என மக்கள் கேட்கின்றனர்.
News November 22, 2025
பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

கடலூர் மாவட்ட பாஜக விவசாய அணி துணைத் தலைவர் செல்வராசு, அமைச்சர் கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் சுமார் 100 பேரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கடந்த சில தினங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் <<18345411>>மாற்றுக் கட்சியினர்<<>> பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால், திமுகவும் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.


