News August 2, 2024
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
வாய் மற்றும் பற்கள் பிரச்னைக்கு இதை செய்யுங்க

உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? உங்களுக்கு வலிமையற்ற பற்கள் உள்ளதா? இதுபோன்று வாய் மற்றும் பற்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு எளிய தீர்வுகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். இதில், என்னென்ன பிரச்னைக்கு, என்ன சாப்பிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News November 22, 2025
பிஹார் மக்களிடம் ₹1,000 நன்கொடை கேட்கும் PK

அடுத்த 5 ஆண்டுகளுக்கு தனது வருமானத்தின் 90%-ஐ ஜன் சுராஜ் கட்சியின் வளர்ச்சிக்கு அளிக்கவுள்ளதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். அத்துடன், பிஹார் மக்கள் ஆண்டுக்கு ₹1,000-ஐ நன்கொடையாக தனது கட்சிக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறு அளிக்காதவர்களை தான் சந்திக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். பிஹார் தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஜன் சுராஜ் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 22, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


