News August 2, 2024
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
Similar News
News October 26, 2025
தங்கம் விலை ₹5,600 குறைந்தது.. CLARITY

தீபாவளிக்கு முன்பு வேகமாக உயர்ந்த தங்கம் பின்னர் மளமளவென குறைந்தது. இதற்கான காரணம் புரியாமல் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அதன் பின்னரே, சர்வதேச அளவில் நிகழும் வர்த்தக மாற்றங்களே என்பது புலம்பட ஆரம்பித்தது. கடந்த 17-ம் தேதி புதிய உச்சம்(₹97,600) தொட்ட தங்கம் அதன் பின்னர் ₹5,600 குறைந்து ₹92,000 ஆக உள்ளது. விலை சரிவு ஏன் என வல்லுநர்கள் கூறிய காரணங்களை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
News October 26, 2025
சுவாசப் பிரச்னையா.. குணமாக்கும் கசாயம்!

◆தேவை: ஆடாதோடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகு ◆செய்முறை: 2 கப் தண்ணீரில் ஆடாதோடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகு ஆகியவற்றை சேர்த்து 2-5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன், அதனை வடிகட்டி குடிக்கலாம். இதனை வாரத்துக்கு 2 முறை பருகினால் சுவாச மண்டல நோய் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News October 26, 2025
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குவதால், வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், விடுமுறையில் இருக்கும் குழந்தைகள், மாணவர்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது..


