News August 2, 2024

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

image

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

Similar News

News November 26, 2025

வயதாகிறதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க

image

வயதாகும்போது உங்கள் சருமம், ஆற்றல் மற்றும் செல்களை பாதுகாக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இது உங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும். இதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை உங்க குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க.

News November 26, 2025

GK வாசனின் தமாகாவில் ஐக்கியமானது காமக

image

காமராஜர் மக்கள் கட்சியை(காமக), ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தமிழருவி மணியன் இணைத்துள்ளார். <<18388915>>நேற்று அரசியலில் இருந்து<<>> விலகுவதாக அறிவித்த அவர், இன்று இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். GK வாசனின், தமாக தற்போது NDA கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஏற்கெனவே, நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது.

News November 26, 2025

SIR இப்போது ஏன் தேவை? SP வேலுமணி புது விளக்கம்

image

வரும் தேர்தலில் EPS ஜெயிப்பது உறுதி என அதிமுக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் Ex அமைச்சர் SP வேலுமணி தெரிவித்துள்ளார். SIR பணிகளை பார்த்து திமுக பயப்படுவதாக கூறிய அவர், அதிமுக எப்போதும் நேர்மையாகவே தேர்தலை சந்திக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும், தேர்தல் நடக்க இன்னும் 5 மாதங்களே இருப்பதால், தற்போது இந்த SIR பணிகள் நடப்பதே சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!