News August 2, 2024
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலையாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என, யாரேனும் ஆசை வார்த்தைகள் கூறினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறி, வாட்ஸ் ஆப்பில் வரும் லிங்க் மற்றும் மெசேஜ்களை கிளிக் செய்யக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
News November 23, 2025
மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தல்

வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், நாளைக்குள் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்று IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது வரும் 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், அந்தமான் கடல்பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 23, 2025
ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி? பாஜக மீது பாய்ந்த TTV

NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டுவரப்படும் என பேசுவது, தமிழகத்தை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் செயல் என டிடிவி தினகரன் சாடியுள்ளார். மெட்ரோ ரயில் என்பது மக்களின் கோரிக்கை எனவும், மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, EPS CM ஆனதும் மெட்ரோ கொண்டுவரப்படும் என <<18346144>>வானதி சீனிவாசன்<<>> கூறியிருந்தார்.


