News August 2, 2024

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

image

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொலை

image

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஹைப்தம் டப்டாபை கொல்லப்பட்டுள்ளார். 12 வயதில் ஹிஸ்புல்லா அமைப்பில் சேர்ந்த ஹைப்தம், 2015-ல் அமைப்பின் முக்கிய நபராக கவனிக்கப்பட்டார். 2016-ல் அமெரிக்காவின் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

News November 24, 2025

ஆஷஸ் தொடரில் ஆஸி.,க்கு ₹17 கோடி நஷ்டம்?

image

பெர்த்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி., வெற்றி பெற்றது. அதேநேரம், இப்போட்டி 2 நாள்களிலேயே முடிவுற்றதால், 3, 4-ம் நாள்களுக்கான டிக்கெட் விற்பனை இல்லாமல் போனது. இதனால் ஆஸி., கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ₹17.32 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போதும் ₹65 கோடி இழப்பை ஆஸி., சந்தித்துள்ளது.

News November 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 529 ▶குறள்: தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். ▶பொருள்: உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.

error: Content is protected !!