News May 10, 2024

34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

வேலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் 242 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 34 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.  மாணவர்களை காட்டிலும் மாணவியர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மே.10) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 21, 2025

சிறுமியை கடத்தி சென்று திருமணம்

image

வேலூரைச் சேர்ந்த பிரசாத் (27) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 1 குழந்தை உள்ள நிலையில், 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். கடந்த மாதம் 27ஆம் தேதி அந்த சிறுமி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், பிரசாத் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, குகையில் பதுங்கியிருந்த பிரசாத், சூர்யா, விஜய் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 20, 2025

வேலூர் மாவட்ட அதிகாரிகள் எண்கள்

image

▶மாவட்ட ஆட்சியர் – 0416-2252345, ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 0416-2253502, வேலூர் சார் ஆட்சியர் – 9445000417, ▶திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை – 7373704205, ▶மாநகராட்சி ஆணையர் 7397389320, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008159, ▶வேலூா் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) 7402606606, ▶உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) – 7824058059, ▶மக்கள் தொடர்பு அலுவலர் – 9498042453. ஷேர் செய்யுங்கள்

News April 20, 2025

வள்ளிமலை கடற்படை வீரர் சாலை விபத்தில் பலி

image

காட்பாடி அடுத்த வள்ளிமலையைச் சேர்ந்தவர் சுனில்குமார் (24). கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்த இவர், அண்மைக்காலமாக ஒடிசா மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 17ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சுனில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஒடிசாவில் இருந்து சுனில்குமார் உடல் நேற்று (ஏப்ரல் 19) வள்ளிமலைக்கு கொண்டு வந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

error: Content is protected !!