News July 31, 2024

3333 பேருக்கு வீடு ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டி தருவதற்கு 3,333 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,431 பேருக்கு பட்டா இடம் உள்ளது அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. ஆனால் மீதமுள்ள 902 பேருக்கு பட்டா இல்லாததால் அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு காவல்துறை ரோந்து

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து குழுவில் ராணிப்பேட்டை, ஆர்காட், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலைய அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் எவ்வித அவசரத்திலும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News November 9, 2025

காவலர் தேர்வு மையங்களை அதிகாரிகள் ஆய்வு

image

இன்று (நவ.09) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. தேர்வு மையங்களை காவல்துறை துணை தலைவர் Z. ஆனி விஜயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News November 9, 2025

ராணிப்பேட்டை: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க!

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!