News July 31, 2024

3333 பேருக்கு வீடு ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டி தருவதற்கு 3,333 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,431 பேருக்கு பட்டா இடம் உள்ளது அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. ஆனால் மீதமுள்ள 902 பேருக்கு பட்டா இல்லாததால் அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 12, 2025

வேப்பூர் அருகே வாலிபர் தலை நசுங்கி உயிரிழப்பு

image

வேலூர் மாவட்டம், கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதியின் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளரான மாளியப்பட்டு வேலு, தேங்காய் வியாபாரம் தொடர்பாக ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தேங்காய் விற்பனையோடு பம்பை அடிக்கும் தொழிலும் செய்து வந்தார்.

News September 11, 2025

மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு

image

ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மையம் (IVPM) மற்றும் அரக்கோணம் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வருகிற 15.09.2025 முதல் தொடங்குகிறது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள 11 வகையான தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கம். ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு 7010307003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News September 11, 2025

காவல்துறை இரவு வந்து பணி விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

error: Content is protected !!