News February 28, 2025

ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: நாளை கடைசி

image

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்க.

Similar News

News February 28, 2025

வெயிலில் கிச்சன் உஷ்ணம் இன்றி இருக்க.. சூப்பர் டிப்ஸ்!!

image

கோடை காலத்தில் கிச்சனில் சமைக்கும் போது, உடலின் உஷ்ணத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்: வீட்டில் சமையலை ஒரு வேளையாக குறைக்கலாம் * சீக்கிரமாக தயாராகும் உணவுகளைத் தேர்ந்தெடுங்கள் *ஜன்னலை திறந்து வையுங்கள். Exhaust ஃபேனை பயன்படுத்துங்கள் *சிறிய பாத்திரங்கள் பயன்படுத்துங்கள். அவை, விரைவாக சூடாகி சமையல் வேகமாக முடியும் *உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள அடிக்கடி தண்ணீர், பழச்சாறுகளை பருகுங்கள்.

News February 28, 2025

வெதர்மேன் இல்லை; இனி வெதர்வுமன்

image

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக முதல் முறையாக பெண் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். 2016ல் இந்த பொறுப்புக்கு வந்த பாலச்சந்திரன் ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1991ல் வானிலை ஆய்வு மையத்தில் பணிக்கு சேர்ந்த இவர், பருவமழையின் தரவுகளை ஆராய்ந்து பி.ஹெச்டி பட்டம் பெற்றிருக்கிறார்.

News February 28, 2025

காவல் ஆய்வாளருக்கு வாரண்ட்.. சீமான் வழக்கில் திடீர் திருப்பம்

image

சீமான் வீட்டில் நேற்று சம்மன் அளிக்க சென்றபோது ஏற்பட்ட மோதலில் இருவரை கைது செய்த காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வேறொரு வழக்கில் தாம்பரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2019இல் வழக்கறிஞர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சீமான் மீதான பாலியல் வழக்கில் அவர் இன்று ஆஜராக உள்ள நிலையில், இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!