News December 12, 2025
324 சமுதாய மக்களும் வளர வேண்டும்: ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், வன்னியர்கள் மட்டுமல்ல 324 சமுதாய மக்களும் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார். அனைத்து சமூக மக்களும் நலமாக வாழ வேண்டும் என்றார். மேலும், இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது என குறிப்பிட்டார்.
Similar News
News March 7, 2026
திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது: பா.ரஞ்சித்

நாங்குநேரியிலும், சிவகங்கை இடைக்காட்டூரிலும் நடந்த சாதிவெறி தாக்குதல்கள் நெஞ்சை உறைய வைப்பதாக பா.ரஞ்சித் கூறியுள்ளார். தனது X பதிவில், கடந்த 6 ஆண்டுகளில் நெல்லையில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டி, இப்பிரச்னைகளை எதிர்கொள்வதில் திமுக அரசும், போலீசும் தோல்வி அடைந்திருப்பதாக அவர் சாடியுள்ளார். எனவே, TN-ல் சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
News March 7, 2026
சற்றுமுன்: கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது

சுமார் 10 மாதங்களுக்கு பிறகு சென்னையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலை ₹60 உயர்ந்து ₹928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹114.50 உயர்ந்து ₹2,043.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 7 முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வரும். அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமே இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
News March 7, 2026
இதுதான் உண்மையான ‘தங்க வாத்து’

சீனாவின் ஒரு கிராமத்தில் ‘தங்க முட்டையிடும் வாத்து’ கதை நிஜத்தில் நிகழ்ந்துள்ளது. இறைச்சிக்காக வீட்டில் வளர்த்த வாத்தை அறுத்தபோது, அதன் வயிற்றில் 10 கிராம் தங்கம் இருந்துள்ளது. இது இந்திய மதிப்பின்படி ₹1.65 லட்சம் ஆகும். தங்கம் இருந்ததாக வரலாற்றில் கூறப்படும் சென்ஷுய் ஆற்றின் கரையோரம் வாத்து மேய்ந்ததால் துகள்கள் வயிற்றுக்குள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


