News March 4, 2025
3,200 ஏக்கர் நிலங்களுக்கு 326.56 மில்லியன் தண்ணீர் திறப்பு

வீடூர் அணையிலிருந்து வீடூர், சிறுவை, ஐவேலி, பொம்பூர், கோரக்கேணி, எரையூர், கடகம் பட்டு, நெமிலி, புதுச்சேரி மாநிலம், புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், தேத்தம்பாக்கம், சுத்துக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்ட 3,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேற்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு மொத்தம் 326.56 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
விழுப்புரம்:விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு!

விழுப்புரம் அருகே பில்லூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி பேரன் மலட்டாற்றில் குளிக்க சென்ற நிலையில் கண்டித்து அடித்துள்ளார். இதை கேள்விப்பட்ட சுப்பிரமணியின் மருமகள் பானுமதி, அவரது உறவினர்கள் இளையபெருமாள், பார்த்தசாரதி ஆகிய 4 பேரும் சேர்ந்து சுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவரை தாக்கினர். புகாரின் பேரில் 4 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
News December 6, 2025
விழுப்புரத்தில் தாய் திட்டியதால் மகளுக்கு நேர்ந்த விபரீதம்!

விழுப்புரம் கணபதி நகரைச் சேர்ந்த ஷபி மகள் ரஷிதாபேகம் ரஷிதா பேகத்துக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்படுமாம். இதற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் டிச. 2-ஆம் தேதி வீட்டில் வேலை செய்யாமல் ரஷிதா இருந்த நிலையில் தாய் திட்டியதால் வலிப்பு நோய் மாத்திரை அதிகமாக உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
News December 6, 2025
விழுப்புரத்தில் அதிகாரி வீட்டில் நகை திருட்டு !

விழுப்புரத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் வீட்டில் 2 பவுன் நகைகள்,ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.சிவசக்தி நகரைச் சேர்ந்த செந்தில்குமார்.இவர் இரவு தூங்கி எழுந்து பார்த்தபோதுகீழ் தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து திருடு போயிருப்பதுதெரிய வந்தது. விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


