News March 4, 2025
3,200 ஏக்கர் நிலங்களுக்கு 326.56 மில்லியன் தண்ணீர் திறப்பு

வீடூர் அணையிலிருந்து வீடூர், சிறுவை, ஐவேலி, பொம்பூர், கோரக்கேணி, எரையூர், கடகம் பட்டு, நெமிலி, புதுச்சேரி மாநிலம், புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், தேத்தம்பாக்கம், சுத்துக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்ட 3,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேற்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு மொத்தம் 326.56 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
விழுப்புரம்: பைக், ஸ்கூட்டர் மோதல் – 2 பேர் பலி!

விழுப்புரம், மரக்காணத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், அரவிந்த் நேற்று அதே பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஸ்கூட்டரை திடீரென திருப்பிய நிலையில், பின்னால் வந்த சென்னையை சேர்ந்த சூர்யன் பலமாக மோதினார். இந்த விபத்தில் சூர்யன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், கிருஷ்ணனும் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 16, 2025
விழுப்புரத்தில் 453 பேர் ஆப்சென்ட்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, 16 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 4,001 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 3,548 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 453 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
விழுப்புரத்தில் கனமழை வெளுக்கும்!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாளை (நவ.17) & நவ.18ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட, மாவட்ட ஆட்சியருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணி அலெர்ட் பண்ணுங்க.


