News August 3, 2024
பயங்கரவாதிகள் தாக்கியதில் 32 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், ஹோட்டல் ஒன்றில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஹோட்டலுக்குள் புகுந்த அல் ஷபாப், ஐஎஸ் பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கிருந்த பலரை பணய கைதியாகவும் பிடித்து வைத்திருந்தனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பணய கைதிகள் அனைவரையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
Similar News
News November 25, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளை கண்காணிக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். ஏரிகள், அணைகள் உள்ளிட்டவற்றின் நீர் இருப்பை முழு கொள்ளளவில் இருந்து 20% வரை குறைக்கவும், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
News November 25, 2025
Layoff-ல் இணைந்த ஆப்பிள் நிறுவனம்

கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் என பெரும் நிறுவனங்கள் Layoff செய்தபோதும், ஆப்பிள் அந்த முறையை கையாளாமல் இருந்தது. தற்போது, ஆப்பிள் நிறுவனமும் Layoff அறிவிப்பை முதல் முறையாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் உடனான ஈடுபாட்டை வலுப்படுத்த, சேல்ஸ் குழுவில் சில மாற்றங்களை செய்வதாகவும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பணி நீக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
News November 25, 2025
2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 548 ரன்கள் டார்கெட்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, 2-வது இன்னிங்ஸில் 260/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்மூலம், இந்தியாவுக்கு 548 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 நாள் ஆட்டமே எஞ்சி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, 2-வது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா?


