News August 3, 2024
பயங்கரவாதிகள் தாக்கியதில் 32 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், ஹோட்டல் ஒன்றில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஹோட்டலுக்குள் புகுந்த அல் ஷபாப், ஐஎஸ் பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கிருந்த பலரை பணய கைதியாகவும் பிடித்து வைத்திருந்தனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பணய கைதிகள் அனைவரையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
Similar News
News November 27, 2025
தவெக அலுவலகத்தில் செங்கோட்டையன்

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு ஆதரவாளர்கள் புடைசூழ செங்கோட்டையன் சென்றுள்ளார். Ex. MP சத்யபாமாவும், KAS-ம் தனித்தனியாக காரில் சென்று இறங்க, சொந்த மாவட்டத்தில் இருந்து சொகுசு பஸ் மூலம் 100 பேரையும் கூட்டி வந்துள்ளனர். விஜய் முன்னிலையில் இன்று KAS தவெகவில் இணையவுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்துக்கு இணையான பதவி அவருக்கு கொடுக்கப்படலாம் என விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.
News November 27, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் அடுத்த அதிரடி

சேலம் ஆத்தூர் அருகே அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் இணைச் செயலாளரான சங்கர், தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சங்கர் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார்.
News November 27, 2025
தித்வா புயல்: பெயருக்கு இதுதான் அர்த்தமா..!

வங்க கடலில் உருவாக உள்ள புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘தித்வா’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. “Detwah Lagoon” என்பது யேமனின் Socotra தீவில் உள்ள குளத்தை குறிக்கிறது. அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறவிருக்கும் இது, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறதாம். இதனால் சென்னை உள்பட வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என IMD எச்சரித்துள்ளது.


