News March 21, 2024
மேலும் 32 தமிழக மீனவர்கள் கைது

எல்லை கடந்து மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மேலும் 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 25 பேர் மற்றும் மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்த 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
Similar News
News November 21, 2025
மேலும் ஒரு வாரம்… பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ.19-ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது நவ.27 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்கள் அடிப்படையிலேயே இறுதி மதிப்பெண் அச்சிடப்படும் என்பதால், பணிகளை கவனமாக மேற்கொள்ள HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 21, 2025
BREAKING: பாஜகவில் இணையும் அதிமுக Ex எம்எல்ஏ

2 நாள்களுக்கு முன்பு புதுச்சேரி அதிமுகவிலிருந்து விலகிய <<18330707>>Ex MLA பாஸ்கர்<<>> பாஜகவில் இணைய உள்ளார். அதிமுகவிலிருந்து விலகிய பிறகு, புதுச்சேரியின் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்துப் பேசியுள்ளார். 2011-16, 2016-21 வரை முதலியார்பேட்டை தொகுதியில் வென்ற பாஸ்கர் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்து வந்தார். புதுச்சேரியில் NDA கூட்டணி ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
ரயில்வேயில் 1,785 Apprentice பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 1,785 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த ஓராண்டு பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மெரிட் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு iroams.com என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வரும் டிச.17-ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்.


