News March 21, 2024

மேலும் 32 தமிழக மீனவர்கள் கைது

image

எல்லை கடந்து மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மேலும் 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 25 பேர் மற்றும் மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்த 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

Similar News

News November 25, 2025

தலைமை சொன்னால் CM ஆக தொடர்வேன்: சித்தராமையா

image

கர்நாடகாவில் <<18373166>>உள்கட்சி பூசல்<<>> உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். டிகே சிவகுமாரும் தலைமையின் முடிவுக்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், நான் முதல்வராக தொடர வேண்டும் என்று தலைமை முடிவெடுத்தால், தொடர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து ராகுல் வந்த பிறகு, இதுபற்றி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

News November 25, 2025

ராசி பலன்கள் (25.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News November 25, 2025

புஸ்ஸி ஆனந்த், ஆதவிடம் CBI தீவிர விசாரணை

image

41 பேர் உயிரிழந்த கரூர் துயரம் தொடர்பாக தவெக தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியுள்ளது. சுமார் 10 மணி நேரம் நடந்த விசாரணையில் தவெக தலைவர்கள் அளித்த விளக்கத்தை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். அவர்களிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!