News December 30, 2024
32 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் உதவி

தூத்துக்குடியில் உள்ள காமராஜர் கல்லூரியில் வைத்து இன்று(டிச.30) புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 33 லட்சம் மதிப்பீட்டிலான மூன்று சக்கர வண்டிகளை வழங்கினார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
Similar News
News April 6, 2026
தூத்துக்குடி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News April 6, 2026
தூத்துக்குடி: கலெக்டர் காரை துரத்தி வந்த இளைஞர்.!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், நேற்று முன்தினம் ஆய்வுப் பணிக்காக அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது பின்னால் சொகுசு காரில் வந்த இளைஞர் ஒருவர் கலெக்டர் காரை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் VVD சிக்னல் பகுதியில் ஆட்சியரின் கார் நின்ற போது, பின் தொடர்ந்து வந்த அந்த இளைஞர் காரிலிருந்து இறங்கி ஆட்சியரை அவதூறாக பேசியுள்ளார். காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை.
News April 6, 2026
தூத்துக்குடி: அரசுப் பேருந்து மோதி இளைஞர் பலி.!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (27) என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவர் நேற்று மதியம் பரமன்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து அரசு பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


