News March 4, 2025

பஸ் மீது லாரி மோதியதில் 31 பேர் பலி

image

பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகே, பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி மோதிய வேகத்தில், சுமார் 500 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த 22 பேர் ஹாஸ்பிட்டலில் உள்ளனர். இந்த கோர விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பொலிவியாவின் சுக்ரேவில் இரு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 4, 2025

வைகுண்டர் வழி நடந்து மனிதம் காப்போம்: CM ஸ்டாலின்

image

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினத்தையொட்டி, CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆதிக்க நெறிகளுக்கும், சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக போராடியவர் என்றும், ‘எளியாரைக் கண்டு இரங்கியிரு மகனே, வலியாரைக் கண்டு மகிழாதே மகனே’ என அவர் போதித்துச்சென்ற வழி நடந்து மனிதம் காப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

அவதூறு பரப்புவது ஏன்? ரஷ்மிகா தரப்பு கேள்வி

image

கர்நாடகத்தை புறக்கணிப்பதாக காங்., MLA ரவிக்குமார் கவுடா குற்றச்சாட்டை ரஷ்மிகா தரப்பு மறுத்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ரஷ்மிகாவுக்கு அழைப்பு விடுத்தும், அவர் கலந்துகொள்ளவில்லை என எம்எல்ஏ குற்றஞ்சாட்டியிருந்தார். உண்மைக்கு புறம்பான இதுபோன்ற அவதூறுகளை நிறுத்துமாறும், தங்களுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் ரஷ்மிகா தரப்பு விளக்கமளித்துள்ளது.

News March 4, 2025

BREAKING: மகாராஷ்டிரா அமைச்சர் முண்டே ராஜினாமா

image

மகாராஷ்டிரா உணவுத்துறை அமைச்சர் தனஞ்செய் முண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீட் மாவட்டத்தில் கடந்த டிச. மாதம் பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் படுகொலை செய்யப்பட்டார். இதில், அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், இந்த வழக்கில் அமைச்சரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து NCPயை சேர்ந்த முண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

error: Content is protected !!