News October 25, 2025
TN-ல் மழைக்கு 31 பேர் பலியாகியுள்ளனர்: KKSSR

தமிழகத்தில் அக்.1 முதல் 25-ம் தேதி வரை பெய்த மழைக்கு, 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘மோன்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகாம்கள் தயாராக உள்ளதாகவும், ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 20, 2026
மோதல் அரசியலுக்கு விதை தூவும் கவர்னர்: CPI

அமைதியும், நல்லிணக்கமும் நிலவும் TN-ல் மோதல் அரசியலுக்கு விதை தூவுகிறார் கவர்னர் ரவி என CPI மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். ஆரம்ப நாளிலிருந்தே அரசியலமைப்பை மீறி, TN அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், ரவியை கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். மேலும், ஆளும் அரசு மீது எந்த ஆதாரமும் இல்லாத அரசியல் அவதூறுகளை அறிக்கையாக வெளியிட்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
News January 20, 2026
பாஜக தேசிய தலைவரின் சொத்து மதிப்பு இதுதான்!

பாஜகவின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கு ₹3.08 கோடி மதிப்பிலான சொத்துகளும், ₹56 லட்சம் கடனும் உள்ளது. மேலும், அவரது மனைவியிடம் ₹60,000 ரொக்கமாகவும், வங்கி கணக்கில் ₹98 லட்சமும் உள்ளதாம். அவரது மனைவி தனியார் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
செங்கோட்டையன் தவெகவில் இருந்து விலகலா? Clarity

தவெகவில் இருந்து <<18908935>>செங்கோட்டையன்<<>> விலக உள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், விஜய்யுடனான தனது நெருக்கம் குறித்து அவர் பேட்டியளித்துள்ளார். அதில் விஜய் தன் மீது சகோதர பாசத்துடன் உள்ளதாகவும், தனது கஷ்டங்களை உணர்ந்து கைகொடுத்தவர் என்றும் நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், புஸ்ஸி ஆனந்துக்கும், தனக்கும் இடையே சிறிய இடறல்கூட இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


