News October 25, 2025

TN-ல் மழைக்கு 31 பேர் பலியாகியுள்ளனர்: KKSSR

image

தமிழகத்தில் அக்.1 முதல் 25-ம் தேதி வரை பெய்த மழைக்கு, 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘மோன்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகாம்கள் தயாராக உள்ளதாகவும், ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News October 25, 2025

சற்றுமுன்: பிரபல நடிகை காலமானார்

image

9-1-1: Nashville டிவி தொடர் மூலம் உலகளவில் பிரபலமான நடிகை இசபெல் தாட்(23) இளம் வயதில் உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. charcot-marie-tooth disease நோயால் கால் நரம்பு பாதிக்கப்பட்டு வீல் சேரில்தான் அவரது இறுதி நாள்களை கழித்துள்ளார். மேலும், அவரது நுரையீரல், இதயமும் பாதிக்கப்பட்டு இசபெல் தாட் உயிர்பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News October 25, 2025

விஜய் கேட்டதால் அந்த ரோலில் நடிக்கவில்லை: ரோஜா

image

‘நீங்களா மாமியார் கேரக்டர் பண்றீங்க, என்னால ஏத்துக்கவே முடியல’ என்று விஜய், ‘காவலன்’ ஷூட்டிங்கின் போது தன்னிடம் கேட்டதாக ரோஜா கூறியுள்ளார். இதேபோல், தெலுங்கு நடிகர் கோபிசந்த்தும் கேட்டதால், இனி அம்மா, மாமியார் ரோல்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ரம்யா கிருஷ்ணனுக்கு ராஜமாதா கேரக்டர் கிடைத்தது போல, தனக்கும் வலுவான ரோல் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

News October 25, 2025

மத்திய அரசில் 258 காலியிடங்கள்.. ₹44,900 சம்பளம்!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி முடித்து, 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹44,900 மாதச்சம்பளமாக வழங்கப்படும். நவம்பர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

error: Content is protected !!