News February 9, 2025
31 நக்சல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் வெடி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 போலீசாரும் உயிரிழந்தனர். நக்சல் இல்லா நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் 81 நக்சல்களும், கடந்த ஆண்டு 219 நக்சல்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
Similar News
News March 3, 2026
இன்று சந்திர கிரகணம்: தம்பதியர் ஒன்று சேரலாமா!

சந்திர கிரகணத்துக்கு முன்பு 9 மணிநேரமும், கிரகணத்தின் போதும் பூமியின் சூழல் அசுத்தமாவதாக இந்துமத நம்பிக்கை கூறுகிறது. இந்நேரத்தில் பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வகையில், தம்பதியர் உறவில் ஈடுபடுவதையும் கிரகணம் முடியும்வரை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
News March 3, 2026
காங்கிரஸ் கட்சியில் பிளவா? 13 MLA-க்கள் போர்க்கொடி

40 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் நிலையில் திமுகவோ 29 தொகுதிகளை கொடுக்க மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனிடையே தவெகவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹைதராபாத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தவெகவுடன் காங்., பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்து, 13 MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவெகவுடன் கூட்டணி அமைத்தால் கட்சியில் இருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளனர்.
News March 3, 2026
முட்டை விலை மளமளவென குறைந்தது

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிந்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு முட்டைகள் தேக்கம் அடைந்திருப்பதே விலை சரிவுக்கு காரணம். கடந்த 1 வாரத்தில் மட்டும் சுமார் 1 ரூபாய் வரை விலை குறைந்து ₹4.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், சில்லறை விற்பனையிலும் முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளது. உங்க ஏரியாவில் 1 முட்டையின் விலை எவ்வளவு?


