News February 9, 2025

31 நக்சல்கள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கர் மாநிலத்தில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் வெடி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 போலீசாரும் உயிரிழந்தனர். நக்சல் இல்லா நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் 81 நக்சல்களும், கடந்த ஆண்டு 219 நக்சல்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Similar News

News September 9, 2025

உடல் எடையை குறைக்க இந்த இட்லி தான் பெஸ்ட்!

image

உடல் எடையை குறையவும், செரிமானம் மேமப்படவும் குதிரைவாலி இட்லி உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
*குதிரைவாலி அரிசியை தனியாகவும், உளுந்து, வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவையுங்கள்.
*இவற்றை தனித்தனியாக அரைத்து, ஒன்றாக கலந்து 8 மணி நேரம் வரை புளிக்க வையுங்கள்.
*இந்த மாவில் உப்பு சேர்த்து, இட்லித் தட்டுகளில் ஊற்றினால், ஆவி பறக்க பறக்க இட்லி ரெடி! நண்பர்களுக்கும் Share பண்ணுங்க!

News September 9, 2025

தொடர் ஏறுமுகத்தில் சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 263 புள்ளிகள் உயர்ந்து 81,051 புள்ளிகளிலும், நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 24,847 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. TCS, Bajaj Finserv, Tech Mahindra நிறுவனங்களின் பங்குகள் லாபத்தையும், Tata Motors, Shriram Finance உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று நஷ்டத்தையும் சந்தித்துள்ளன. நீங்க வாங்கிய SHARE லாபம் தந்ததா?

News September 9, 2025

துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது எப்படி?

image

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், துணை ஜனாதிபதி தேர்தல், லோக்சபா & ராஜ்யசபா உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படும். தேர்தலில் போட்டியிடுபவர் 35 வயதை கடந்தவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது 20 பரிந்துரையாளர்கள் & 20 ஆதரவாளர்களின் கையொப்பம் & ₹15,000 வைப்பு தொகையை வேட்புமனுவில் வழங்கியிருப்பார். மெஜாரிட்டி பெறுபவர் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் தேர்வாகிறார்.

error: Content is protected !!