News April 21, 2025

 31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது

image

அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1994 ஆம் ஆண்டு, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலைய படைவீரர் சவுத்ரி என்பவர், அவரது மனைவியை பாஸ்கர் ஜோதி கோகாயுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த வழக்கில் 2ம் குற்றவாளியான பாஸ்கர் ஜோதி கோகாய் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் அசாம் மாநிலத்தில் இருப்பதாக தகவல் அறிந்து, அரக்கோணம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

Similar News

News October 15, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று அக்டோபர் 15ஆம் தேதி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

News October 15, 2025

ராணிபோட்டை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

ராணிப்பேட்டை: பணம் திருடு போய்டுச்சா ? இத பண்ணுங்க

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் . ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.

error: Content is protected !!