News April 21, 2025
31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது

அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1994 ஆம் ஆண்டு, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலைய படைவீரர் சவுத்ரி என்பவர், அவரது மனைவியை பாஸ்கர் ஜோதி கோகாயுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த வழக்கில் 2ம் குற்றவாளியான பாஸ்கர் ஜோதி கோகாய் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் அசாம் மாநிலத்தில் இருப்பதாக தகவல் அறிந்து, அரக்கோணம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
Similar News
News September 15, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 15, 2025
ராணிப்பேட்டை: ஒற்றை பாறையில் அமைந்த கோயில்

குடைவரை கோயிலுக்கு பெயர் போன பல்லவர்கள் கட்டிய கோயில்களில் ராணிப்பேட்டை மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் தனித்துவமாக உள்ளது. மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட இக்கோயில், வெட்டவெளியில் ஒரு சிறு பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதுவே இதன் தனிசிறப்பாக உள்ளது. மேலும் இந்த கோயில் ராணிப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 15, 2025
ராணிப்பேட்டை: மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மின் பகிர்மான வட்டம், ராணிப்பேட்டையில் இந்த மாதத் திற்கான மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்க இருக்கிறது. நிகழ்வு ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். என ராணிப்பேட்டை செயற் பொறியாளர் எஸ்.விஜயகுமார் கூறினார்.