News October 7, 2024
3000 குடும்பங்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம்

திருச்சி திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் பத்மநாபன் தலைமையில் இன்று திருச்சி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அடிமனை பிரச்சனை சம்பந்தமாக பலமுறை மனுகொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறநிலையதுறை உதவியுடன் நிரந்தர தீர்வு காணவில்லையெனில் சுமார் 3,000 குடும்பங்கள் முதற்கட்டமாக வீதிக்கு வந்து போராடுவது என்று முடிவெடுத்துள்ளனர்.
Similar News
News August 18, 2025
திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

பொது மக்களின் நலன்கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் Say NoTo DRUGS & TOBACCO புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கும் வழிவகுக்கும்.
போதைப் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் உதவி எண் 8939146100 அழைக்க கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW
News August 18, 2025
திருச்சிக்கு பக்கத்துல நம்பமுடியாத இடங்கள்?

திருச்சியில் மலைக்கோட்டை, கல்லணை ,ஸ்ரீ ரங்கம் கோயில் போன்ற இடங்களை தவிர நமக்கு தெரியாத பல இடங்கள் திருச்சியை சுற்றி இருக்குனு தெரியுமா?
✅முக்கொம்பு அணை,
✅பட்டாம்பூச்சி பூங்கா,
✅திருச்சி ரயில்வே அருங்காட்சியகம்,
✅அண்ணா அறிவியல் மைய கோளரங்கம்,
✅பச்சமலை மலைகள்,
✅புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி,
நம்ம திருச்சிக்கு பக்கத்துல இப்படி பல இடங்கள் இருக்குனு தெரியாத நபர்களுக்கும் SHARE செய்து ஒரு Visit பண்ணுங்க!
News August 18, 2025
திருச்சியில் கஞ்சா விற்ற மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த முகேஷ் என்பவரையும், புங்கனூர் அருகே கஞ்சா வைத்திருந்த குணப்பிரகாசம், ராம்ஜி நகரில் கஞ்சா வைத்திருந்த ரமணி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இம்மூவரின் தொடர்பு குற்ற நடவடிக்கைகளை தடுக்க. இவர்களை குண்டாஸ் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க திருச்சி எஸ்பி உத்தரவிட்டார்.