News August 7, 2025

300 லிட்டர் தாய்ப்பால் தானம்! சாதனை படைத்த திருச்சி பெண்

image

திருச்சி காட்டூரை சேர்ந்த செல்வ பிருந்தா(32), உண்மையான தாய்மையின் உதாரணம். கடந்த 22 மாதங்களில், தனது குழந்தைகளின் தேவைக்கு அதிகமாக சுரந்த 300.17 லிட்டர் தாய்ப்பாலை, திருச்சி மகாத்மா காந்தி ஹாஸ்பிடலுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதற்காக இந்தியா புக், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் அவர் இடம் பெற்றுள்ளார். ‘பிற குழந்தைகளுக்கும் பாசம் பஞ்சமில்ல’ என உணர்ந்து உதவிய இந்த தாய்க்கு பாராட்டுகள் குவிகிறது.

Similar News

News August 7, 2025

80 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க: ஸ்டாலின்

image

இலங்கை சிறையில் உள்ள TN மீனவர்கள் 80 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த ஆண்டில் மட்டும் 17 முறை TN மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பல முறை கடிதம் எழுதியும் நேற்று வரை கைது நடவடிக்கை தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். தூதரக ரீதியாக நடவடிக்கை எடுத்து மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.

News August 7, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪கருணாநிதி <<17327639>>நினைவு <<>>நாள்: CM தலைமையில் அமைதி பேரணி
✪டிரம்புக்கு மறைமுக <<17328569>>வார்னிங்<<>> கொடுத்த PM மோடி
✪திருப்பூர் SSI <<17327420>>கொலை <<>>வழக்கில் என்கவுன்டர்
✪சூது செய்து <<17329000>>பாமகவை <<>>பறிக்க துடிக்கும் அன்புமணி.. ராமதாஸ்
✪தங்கம் விலை மேலும் ₹160 உயர்வு.. சவரன் ₹75,200-க்கு விற்பனை ✪ஆசிய <<17328075>>கோப்பை<<>>: பும்ரா அவுட்.. ரிஷப் பண்ட் டவுட்!

News August 7, 2025

கூட்டணி மாறும் மதிமுக: மல்லை சத்யா

image

துரை வைகோ மத்திய அமைச்சராக ஆசைப்படுவதால் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விரைவில் கூட்டணி மாறும்; அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரை எடுத்து வருவதாகவும் உறுதிப்பட தெரிவித்தார். மதிமுக கூட்டணி மாறப்போவதாக வெளியான செய்தியை வைகோ மறுத்த நிலையில், கடந்த 2 வாரங்களில் மோடியை துரை வைகோ 2 முறை (திருச்சி, டெல்லி) சந்தித்துள்ளார்.

error: Content is protected !!