News July 11, 2024

300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு – ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மைய அலுவலகத்தில் நாளை(ஜூலை.12) 18 – 35 வயதுடையவர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 300 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in இனையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 94990 55914 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 21, 2025

அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள்<> இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஏப்.21) கடைசி நாள். எனவே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 21, 2025

விக்கிரமங்கலம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உல்லியக்குடியைச் சேர்ந்தவர் சரோஜா(80). இவர் தனது வீட்டின் வாசலில் இருந்தபோது, அந்த வழியாக சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மூதாட்டி சரோஜா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த வெண்மான் கொண்டான் வடக்கு தெருவை சேர்ந்த சரத்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.

News April 20, 2025

அரியலூரில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

image

அரியலூரில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!