News September 15, 2024

30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு

image

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழர்கள் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு CM ஸ்டாலின் இன்று காலை அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, 30 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் நாளை இரவு டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை அழைத்துவரப்பட உள்ளனர். தற்போது அவர்கள் தட்சுல்லா என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News May 8, 2025

கேது பெயர்ச்சி: பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்

image

மே 18-ம் தேதி நடக்கவுள்ள கேது பெயர்ச்சியால் பின்வரும் 3 ராசிகள் அதிக நன்மைகள் அடைவர்: *சிம்மம்: தடைகள் நீங்கும். தொழில், வேலையில் உயர்வு, நிதிநிலை மேம்படும். பெண்களின் அந்தஸ்து உயரும். *விருச்சிகம்: புதிய முயற்சிகள் பலன் தரும், திருமண யோகம், குடும்ப வாழ்க்கை பலப்படும் *மகரம்: மன அழுத்தத்திலிருந்து விடுதலை. திருமண யோகம் உண்டு. காதல் வாழ்க்கை சிறக்கும். நிதிநிலை மேம்படும்.

News May 8, 2025

பஞ்சாப் அணி பேட்டிங்

image

இன்றைய ஆட்டத்தில் PBKS – DC அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்கும்

News May 8, 2025

27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மிதமான மழை: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். லேசான மழை: சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், கரூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர்.

error: Content is protected !!