News April 27, 2024
30 வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்

ஆம்பூர் தாலுகா போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோலூர் ஊராட்சி புது சோலூரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சாந்தகுமார் (30) அதே பகுதியில் வெளி மாநில மதுபாட்டில்களை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 30 வெளி மாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
திருப்பத்தூர்: சகல ஐஸ்வர்யங்களும் பெருக வேண்டுமா..?

திருப்பத்தூர், திருமால்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவத்தலமாகும். பிரம்ம தேவனே நேரில் வந்து வழிபட்டதால் இக்கோயில் இப்பெயர் பெற்றது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தைத் தரிசித்தால், தலையெழுத்தே மாறும் என்பதும், தொழில் மேன்மையடைந்து வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இலவச ஆலோசனை பெறுவது எப்படி?

திருப்பத்தூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்!
News March 4, 2026
திருப்பத்தூர்: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா? MUST KNOW!

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


