News July 11, 2024
30 நாட்களில் உரிய பதிலளிக்கப்படும்.!

திருச்சி நவல்பட்டு மற்றும் கொணலை பகுதிகளில் இன்று நடைபெற்ற “மக்களுடன் முதல்வர் முகாம்”களில்பொதுமக்களிடமிருந்து 1384 மனுக்கள் பெறப்பட்டது.மேலும் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மனு பெறப்பட்ட 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News July 11, 2025
புத்தாநத்தம்: மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளர் பலி

புத்தாநத்தம் கடைவீதியில் உள்ள மின்மாற்றியில் இன்று மின்பாதை ஆய்வாளர் ஜேம்ஸ் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 11, 2025
திருச்சி: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <
News July 11, 2025
திருச்சி: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்