News August 24, 2024
30ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்

காஞ்சிபுரத்தில், தேசிய குடற்புழு நீக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இப்பணியை தொடங்கி வைத்தார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள 1 – 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 81,186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 20 – 30 வயது வரை உள்ள 83,997 பெண்களுக்கு ‘அல்பென்டசோல்’ என்ற மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு வரும் 30ஆம் தேதி அல்பென்டசோல் மாத்திரை அளிக்கப்பட உள்ளது.
Similar News
News November 21, 2025
காஞ்சி: 7 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை!

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் சேந்தமங்கலத்தை சேரந்தவர் ராணி (70) கடந்த 12ஆம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து விசாரித்த சுங்குவார்சத்திரம் போலீசார், பாப்பாங்குலி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் 7 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்ய 4 மாதங்களாக திட்டமிட்டுள்ளார் என தெரியவந்தது.
News November 21, 2025
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வரும் 21.11.2025 அன்று 9.30 முதல் 3.00 மணி வரை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது!
தகுதி: 8-ம் வகுப்பு, 10th, 12th, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
வேலை தேடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தை அணுகவும்.
News November 21, 2025
காஞ்சி: மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பரிதாப பலி!

காஞ்சிபுரம், படப்பை, துலகானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (50) இவர் நேற்று (நவ.20) ரஜினி, மாரிமுத்து ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது சங்கர் ஏரியில் மூழ்கி மாயமானார். அவரை மீட்க சென்ற ரஜினி, மாரிமுத்து ஆகியோரும் ஏரியின் நடுவில் சிக்க, அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். அவர்கள் சங்கர் உடலை மீட்டு இருவரையும் காப்பாற்றினார்.


