News April 26, 2025
கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News November 4, 2025
FLASH: 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், நவ.9-ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. குடையை ரெடியா வையுங்க.
News November 4, 2025
பிஹாரை அடமானம் வைக்க துடிக்கும் பாஜக: அகிலேஷ்

NDA கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புவதாகவும், பாஜக எப்போதும் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்பட்டதில்லை எனவும் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். தேஜஸ்வியின் வேலைவாய்ப்பு, பெண்களுக்கு ₹2,500 நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகளால் NDA கூட்டணி கட்சியினர் பதற்றமடைந்துள்ளனர். இந்த முறை பிஹார் மக்கள் நல்லிணக்கத்தை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
நீரிழிவு நோயா? இந்த பழங்கள் சாப்பிடலாம்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதால், பழங்களையும் தவிர்த்து விடுவார்கள். ஆனால், குறைந்த சர்க்கரை அளவு, அதிக நார்ச்சத்து கொண்ட பழங்கள், சர்க்கரையை சீராக வைத்திருக்கும். அது என்னென்ன பழங்கள் என தெரிந்து கொள்ள மேலே உள்ள படங்களை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். உங்களுக்கு தெரிந்த வேறு பழம் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. நண்பர்களுக்கு அதிகளவு பகிரவும்.


