News April 26, 2025
கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News December 15, 2025
இரண்டரை ரூபாய் நோட்டு பாத்திருக்கீங்களா?

கைகளில் காசையே அதிகளவில் பார்க்காத இன்றைய UPI ஜெனரேஷனை கண்டிப்பாக இந்த செய்தி ஆச்சரியப்படுத்தும். அவ்வளவு ஏன், எட்டணா, நாலணா போன்றவற்றை பயன்படுத்தியவர்களும் இதை கண்டிருக்க மாட்டார்கள். 1918-ல் இந்த இரண்டரை ரூபாய் நோட்டு (2 ரூபாய் 8 அணா) புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், அடுத்த 8 வருடங்களிலேயே இந்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டது. நீங்க நாலணா, எட்டணா யூஸ் பண்ணிருக்கீங்களா?
News December 15, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை, இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹12,460-க்கும், சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹99,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ₹320 மட்டும் உயர்ந்தால் போதும், ஒரு சவரன் ₹1 லட்சமாக அதிகரிக்கும்.
News December 15, 2025
விஜய்யின் பின்னால் பாஜக: வேல்முருகன்

விஜய்யின் பின்னால் பாஜக செயல்படுவதால்தான், அவர் கேட்காமலேயே ‘z’ பாதுகாப்பு வழங்கப்படுவதாக வேல்முருகன் விமர்சித்துள்ளார். கரூர் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்டது, நாடாளுமன்ற குழு வந்து பார்வையிட்டது, பாஜக தலைவரை சந்தித்த பிறகு செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது எல்லாமே அதற்கு காரணமாக கருதுகிறேன். தவெகவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் விசித்திரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.


