News April 26, 2025
கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News December 27, 2025
குளிர்காலத்துக்கான ஒரு சூப்பர் ஃபுட் இது!

குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், சோர்வு ஆகியவற்றை தடுக்க பூசணி விதைகள் ஒரு சூப்பர் ஃபுட் என நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், *இதில் உள்ள ஜிங்க், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *உடலுக்கு ஆற்றலை தருகிறது *மெக்னீசியம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது *சரும வறட்சியை தடுக்கிறது *நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது.
News December 27, 2025
பிரபல நடிகை மரணம்.. பரபரப்பு தகவல்

‘தி லயன் கிங்’ புகழ் <<18667657>>நடிகை இமானி ஸ்மித்<<>>(25) கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 6 நாள்களுக்கு முன்பு ஆண் நண்பரால் தனது குழந்தைகள் கண்முன்னே இமானி படுகொலை செய்யப்பட்டார். தான் கொடுத்த பணத்தை இமானி திருப்பி கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக கைது செய்யப்பட்ட ஜோர்டன் போலீசாரிடம் கூறியுள்ளார். ஏற்கெனவே கணவரை பிரிந்து வாழும் இமானியின் 2 குழந்தைகள் தற்போது பரிதவித்து வருகின்றனர்.
News December 27, 2025
IAS அதிகாரிகளுக்கு வார்னிங்

2026, ஜன.31-க்குள் அசையா சொத்து விவரங்களை சமர்ப்பிக்க தவறும் IAS அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. 2017-ல் இருந்து IAS அதிகாரிகளின் சொத்து விவரங்கள் இணையவழியில் பெறப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட கால அவகாசத்தில் சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்யும் IAS அதிகாரிகளுக்கு மட்டுமே ஊதிய உயர்வு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.


