News April 26, 2025
கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News December 30, 2025
நடிகை நந்தினி தற்கொலை.. பரபரப்பு தகவல்

கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் தங்கியிருந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் கைப்பற்றியுள்ளது. அதில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் தெரியவரும்.
News December 30, 2025
பல்கலை., மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி

சென்னை பல்கலை., துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா 2022-ல் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ரவி அதனைத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2023-ல் கவர்னர் அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவை 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த முர்மு, தற்போது TN அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
News December 30, 2025
சம்மட்டி அடி கொடுக்கிறார் CM ஸ்டாலின்: கனிமொழி

மதக்கலவரம், காழ்ப்புணர்ச்சியை தவிர வேறு எந்த அரசியலையும் பாஜக செய்யவில்லை என கனிமொழி கூறியுள்ளார். இதற்கு CM ஸ்டாலின் சம்மட்டி அடி கொடுத்து வருவதால், அவரது பின்னால் அனைவரும் அணி திரள்வோம் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும் சங்கிக் கூட்டமும், அடிமைக் கூட்டமும் மகளிருக்கு பாதுகாப்பு இல்லை என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள் என கனிமொழி சாடியுள்ளார்.


