News April 26, 2025
கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News September 13, 2025
இந்தியா மீது வரிவிதித்தது எளிதான காரியமல்ல: டிரம்ப்

உலகளவில் இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மீது 50% வரிவிதித்தது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த முடிவை எடுத்தது எளிதான காரியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், உக்ரைன் போர் என்பது ஐரோப்பாவின் பிரச்னை எனவும், ஆனாலும், இதை தீர்க்க அமெரிக்கா தான் அதிக பணிகளை செய்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
RECIPE: ஹெல்தியான கம்பு சோயா தோசை!

கம்பு சோயா தோசை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
➔கம்பு, சோயா, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசி ஆகியவற்றை தனித்தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
➔ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைத்து, ஒன்றாக கலந்து, உப்பு சேர்த்து கொள்ளவும்.
➔ மாவை 8 மணிநேரம் புளிக்க வைத்து, தோசை செய்து சாப்பிட்டால், ஹெல்தியான கம்பு சோயா தோசை ரெடி. SHARE IT.
News September 13, 2025
ரயிலில் சீட் பிடித்தால் குற்றம்: இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க

ரயில் பெட்டிகள் மீது கற்களை வீசுவது உள்பட பல்வேறு குற்றச் செயல்கள் தற்போது ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதேபோல், சென்னை மின்சார ரயில்களில் சீட் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், சில முக்கிய எச்சரிக்கைகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதை மேலே உள்ள படங்களில் Swipe செய்து பாருங்கள். உங்கள் ரயில் பயணத்தில் ஏற்பட்ட சிரமத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்.