News October 25, 2024

ரயிலில் இவற்றை எடுத்து வந்தால் 3 ஆண்டு சிறை

image

ரயில் பயணத்தில் பயணிகள் நலன் கருதி சில பொருள்களை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன? 1) பட்டாசுகள், வெடிகுண்டுகள் 2) ஸ்டவ் மற்றும் கேஸ் சிலிண்டர் 3) ஆசிட், வாசனை திரவியங்கள் 4) தோள் பொருள் 5) எண்ணெய் மற்றும் க்ரீஸ் தடவப்பட்ட பொட்டலங்கள் ஆகும். இதை மீறி, ரயிலில் அந்தப் பொருள்களை எடுத்து வந்தால் ₹1,000 அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

Similar News

News August 23, 2025

சென்னையில் மழை.. காலையிலேயே துயர மரணம்

image

சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும், 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் இவர்தான். தற்போது அம்மாவை பறிகொடுத்த 2 குழந்தைகளும் யாரும் இல்லாமல் தவிக்கின்றனர்.

News August 23, 2025

ராகுல் காந்தி நடைபயணத்தில் CM ஸ்டாலின்

image

பாஜக, ECI-யை வைத்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதற்கு எதிராக ராகுல் காந்தி பிஹாரில் நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த பயணத்தில் CM ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.27-ல் இந்த பயணத்தில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்தவாறே அவர் வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News August 23, 2025

உங்களிடம் நகை இருந்தால்.. அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி

image

காது, கழுத்துல நகை போட்டு இருந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடையாது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது நேற்று முதல் விவாதப்பொருளாக மாறியுள்ளது. உண்மையில் அமைச்சர் சொல்வதுபோல் அப்படி எதுவும் கிடையாது. 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும்.

error: Content is protected !!