News June 27, 2024
₹10 நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ₹10, ₹20 நாணயங்களை வாங்க மறுப்பதோ, செல்லாது எனக் கூறுவதோ சட்டப்படி குற்றமாகும். இன்றளவும் கிராமப்புறங்களில் ₹10 நாணயங்களை பலர் வாங்க மறுக்கின்றனர். அவ்வாறு ₹10 நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகளின் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 124Aஇன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் RBI தெளிவுபடுத்தியுள்ளது.
Similar News
News October 19, 2025
GST 2.0: ₹7 லட்சம் கோடியை தாண்டும் வருவாய்

GST 2.0 எதிரொலியாக பண்டிகை கால விற்பனை உச்சத்தை அடைந்துள்ளன. டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின் விற்பனை 40 – 45% உயர்ந்துள்ளதாக Haier, ரிலையன்ஸ், LG, கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களிலும் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பண்டிகை காலத்தின் வருவாய் ₹7 லட்சம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 19, 2025
சிக்மண்ட் பிராய்ட் பொன்மொழிகள்

*நாம் ஒருவரையொருவர் தற்செயலாகத் தேர்ந்தெடுப்பதில்லை. நம் ஆழ் மனதில் ஏற்கனவே இருப்பவர்களை மட்டுமே நாம் சந்திக்கிறோம். *வரலாறு என்பது வெறுமனே புதிய மக்கள் பழைய தவறுகளைச் செய்வதுதான். *உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் பலம் வெளிவரும். *தனக்குத்தானே முற்றிலும் நேர்மையாக இருப்பது ஒரு நல்ல பழக்கமாகும். *ஒருவரிடம் அவர் விரும்பியது இல்லாதபோது, தன்னிடம் இருப்பதை அவர் விரும்ப வேண்டும்.
News October 19, 2025
கேப்டன்ஷிப்பை பறிகொடுப்பது பயமாக உள்ளது: SKY

டி20 கேப்டனாக கில் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அது குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். கேப்டன்ஷிப்பை பறிகொடுப்பது என்பது அனைவருக்குமே பயத்தை கொடுக்கு எனவும், ஆனால் அந்த பயம் தான், சிறப்பாக விளையாட தூண்டும் உந்துசக்தியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நேர்மையும், கடின உழைப்பும் இருந்தால் நடக்க வேண்டியது நடக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.