News June 27, 2024
₹10 நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ₹10, ₹20 நாணயங்களை வாங்க மறுப்பதோ, செல்லாது எனக் கூறுவதோ சட்டப்படி குற்றமாகும். இன்றளவும் கிராமப்புறங்களில் ₹10 நாணயங்களை பலர் வாங்க மறுக்கின்றனர். அவ்வாறு ₹10 நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகளின் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 124Aஇன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் RBI தெளிவுபடுத்தியுள்ளது.
Similar News
News November 21, 2025
விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி

கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் <<18345318>>சேலத்தில்<<>> இருந்து தனது பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், கரூரை போல எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, அக்கட்சியின் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற ராணுவ, போலீஸ் அதிகாரிகளை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், சேலத்தில் அவர்கள் களத்தில் இறக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
News November 21, 2025
இன்றுடன் விடைபெறும் CJI கவாய்

சுப்ரீம் கோர்ட் CJI-ஆக BR கவாய்க்கு இன்று கடைசி நாளாகும். வரும் 23-ம் தேதியுடன் அவர் அப்பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நாட்டின் 53-வது CJI-ஆக சூர்யகாந்த் வரும் 24-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக நேற்று நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில், தான் புத்த மதத்தை பின்பற்றினாலும், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் மதச்சார்ப்பற்றவனாக இருந்தேன் என கவாய் தெரிவித்தார்.
News November 21, 2025
கூட்டணி அமைச்சரவை உருவாகும்: பிரேமலதா

2026-ல் தமிழக அரசியலில் மாய மந்திரம் நடக்கும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் அனைவருக்கும் பங்கும், கூட்டணி அமைச்சரவையும் இந்த தேர்தலில் உருவாகும் என்றும் அவர் பேசியுள்ளார். மேலும் மக்களும், தொண்டர்களும் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் எனவும், அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை சாத்தியமா?


