News June 27, 2024
₹10 நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ₹10, ₹20 நாணயங்களை வாங்க மறுப்பதோ, செல்லாது எனக் கூறுவதோ சட்டப்படி குற்றமாகும். இன்றளவும் கிராமப்புறங்களில் ₹10 நாணயங்களை பலர் வாங்க மறுக்கின்றனர். அவ்வாறு ₹10 நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகளின் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 124Aஇன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் RBI தெளிவுபடுத்தியுள்ளது.
Similar News
News December 4, 2025
காஸா துயரம்: பிஞ்சு குழந்தைகள் உள்பட 5 பேர் பலி!

போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், காஸாவில் தாக்குதல்கள் தொடர்ந்தே வருகின்றன. சமீபத்திய இஸ்ரேல் தாக்குதலில் 2 பிஞ்சு குழந்தைகள் உள்பட 5 பேர் பலியான நிலையில், 32 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ்-இஸ்ரேலிய படைகளின் மோதலில் 5 இஸ்ரேல் வீரர்களும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு பிறகான தாக்குதல்களில், இதுவரை 360 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 4, 2025
AVM சரவணின் மறைவால் கண்ணீரில் தமிழ் திரையுலகம்

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் AVM சரவணனின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையே கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்துள்ளது. CM ஸ்டாலின் முதல் ரஜினி, சிவகுமார் என அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது இறுதி அஞ்சலியை அவரது பாதங்களில் சமர்ப்பித்து வருகின்றனர். AVM ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News December 4, 2025
பாமக யாருக்கு? கோர்ட் உத்தரவு

பாமக யாருக்கு என்ற வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை அணுக டெல்லி HC உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரங்களில் EC தலையிட முடியாது என்ற கோர்ட், கடிதங்கள் அடிப்படையில் EC முடிவெடுக்க முடியாது எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் தொடுத்த இவ்வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, அன்புமணிக்கு எதிரான ஆவணங்களோடு அவர் உரிமையியல் கோர்ட்டை நாடுவார் என கூறப்படுகிறது.


