News June 27, 2024
₹10 நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ₹10, ₹20 நாணயங்களை வாங்க மறுப்பதோ, செல்லாது எனக் கூறுவதோ சட்டப்படி குற்றமாகும். இன்றளவும் கிராமப்புறங்களில் ₹10 நாணயங்களை பலர் வாங்க மறுக்கின்றனர். அவ்வாறு ₹10 நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகளின் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 124Aஇன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் RBI தெளிவுபடுத்தியுள்ளது.
Similar News
News November 28, 2025
டிரம்ப்பின் அடுத்த அதிரடி

USA அதிபரின் வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து <<18409306>>19 நாடுகளின்<<>> கிரீன் கார்டுகளை பரிசீலனை செய்ய டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 3-ம் உலக நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதை நிரந்தரமாக நிறுத்துவதாக அவர் அறிவித்துள்ளார். பைடனின் குடியேற்ற கொள்கைகளில் இருந்து முழுமையாக மீண்டுவர இந்த முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 28, 2025
வந்துட்டான்.. வந்துட்டான்! அவெஞ்சர்ஸ்: Doomsday அப்டேட்!

Avengers: Doomsday படத்தின் மூலம், Marvel-ன் மிகப்பெரிய ஹீரோ கேரக்டரில் இருந்து கொடூரமான வில்லனாக மாறியுள்ளார் ராபர்ட் டவுனி Jr. அவரை ‘Doctor Doom’ கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ள நிலையில், போட்டோ ஒன்றை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில், Ironman & Doctor Doom கைகள் இணைவதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால், படத்தின் அப்டேட் ஏதாவது வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 28, 2025
₹50 கட்டினால், ₹35 லட்சம் வரை கிடைக்கும்! அடடே திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் தினமும் ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


