News April 29, 2025

பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி!

image

மதுரை K.K.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் தொட்டியில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ICU-வில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளி இயங்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News December 27, 2025

ஷில்பா ஷெட்டி டீப்ஃபேக் வீடியோஸ்: நீதிமன்றம் உத்தரவு

image

நடிகை ஷில்பா ஷெட்டியின் டீப்ஃபேக் வீடியோக்களின் URL-கள், இணைப்புகள் மற்றும் பதிவுகளை உடனடியாக நீக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கக்கோரி, ஷில்பா ஷெட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த அமர்வு, பிரபலங்களின் பிரைவசி உரிமையை மீறும் வகையில் சித்தரிக்கக் கூடாது என்று உத்தரவில் தெரிவித்துள்ளது.

News December 27, 2025

கோலிக்கு பரிசுத் தொகை இவ்வளவுதானா?

image

விஜய் ஹசாரே டிராபியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணிக்காக விளையாடி, 77 ரன்கள் எடுத்த கோலிக்கு ஆட்ட நாயகன் (POTM) பரிசுத் தொகையாக ரூ.10,000 காசோலை வழங்கப்பட்டது. இந்நிலையில், பெரிய வீரரான கோலி ₹10,000 காசோலையை வாங்குவது வேடிக்கையாக உள்ளதாக, SM-ல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News December 27, 2025

தமிழக சிறுமிக்கு மத்திய அரசு உயரிய விருது

image

உயிரை துச்சமாக நினைத்து சிறுவனை காப்பாற்ற முயன்ற போது உயிரை இழந்த கோவை சிறுமி வியோமா பிரியாவுக்கு பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறுமியின் தாயார் அர்ச்சனா அந்த விருதை ஜனாதிபதியிடம் இருந்து கனத்த இதயத்துடன் பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு மே 23-ம் தேதி சரவணம்பட்டி அருகே பூங்காவில் மின்சாரம் தாக்கி துடித்த சிறுவனை, வியோமா பிரியா துணிச்சலாக மீட்க போராடி உயிரை பறிகொடுத்தார்.

error: Content is protected !!