News April 29, 2025
பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி!

மதுரை K.K.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் தொட்டியில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ICU-வில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளி இயங்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News November 18, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று(நவ.18) சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிந்து 84,787 புள்ளிகளிலும், நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 25,957 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bajaj Finance, Tata Steel, Jio Financial, Larsen, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2% – 5% சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News November 18, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று(நவ.18) சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிந்து 84,787 புள்ளிகளிலும், நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 25,957 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bajaj Finance, Tata Steel, Jio Financial, Larsen, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2% – 5% சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News November 18, 2025
செயல்படாமல் இருக்கும் OPS அலுவலகம்: பிரேமலதா

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசாரத்தின் ஒருபகுதியாக தேனியில் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது, போடி MLA அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதாக ஓபிஎஸ்சை விமர்சித்தார். போடி தொகுதியில் தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற்று வந்த உடன், மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம் என உறுதியளித்தார். ஓபிஎஸ்சை பிரேமலதா நேரடியாக இவ்வாறு அட்டாக் செய்வது இதுதான் முதல்முறை.


