News April 29, 2025

பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி!

image

மதுரை K.K.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் தொட்டியில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ICU-வில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளி இயங்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News November 6, 2025

மூட்டி வலி நீங்க இந்த கஷாயம் குடிங்க!

image

கை, கால், கழுத்து & மூட்டு வலி நீங்க இந்த கஷாயத்தை பருகும் படி, சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ◆தேவை: வரமல்லி, சீரகம், சோம்பு ◆செய்முறை: மேலே குறிப்பிட்ட மூன்றையும் தண்ணீரில் போட்டு, மிதமான தீயில் 3-5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி காலையில் குடித்து வந்தால், மூட்டு வலியை நீக்குவதுடன், அஜீரண கோளாறில் இருந்தும் நிவாரணம் பெறலாம். அனைத்து நண்பர்களுக்கும் இதை பகிரவும்.

News November 6, 2025

திமுக ஆட்சியில் எனக்கு நெருக்கடி: செல்வப்பெருந்தகை

image

விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும் கூட ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதில்லை என செல்வப்பெருந்தகை வருத்தம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி, இந்தியா கூட்டணி ஆட்சி, நம்முடைய ஆட்சி என சொல்கிறோம், ஆனால் அந்த ஆட்சி என்னை எத்தனை முறை கைது செய்திருக்கிறது என கேட்டுப்பாருங்கள் என பேசியுள்ளார். மேலும், இதுவரை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோது 20 முறை தான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

மழை வெளுத்து வாங்கும்

image

கனமழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நெல்லை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. எனவே பள்ளி, கல்லூரி, ஆபீஸுக்கு செல்பவர்கள் குடைகள், ரெயின் கோட்டை எடுத்து செல்ல மறக்காதீங்க மக்களே!

error: Content is protected !!