News April 29, 2025
பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி!

மதுரை K.K.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் தொட்டியில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ICU-வில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளி இயங்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News January 19, 2026
‘அமைதி வாரியத்தில்’ சேர இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு!

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் நிர்வாகம் மற்றும் மறுகட்டமைப்பை மேற்பார்வையிட அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது. தனித்தனியான 11 உறுப்பினர்களை கொண்ட காசா நிர்வாக வாரியத்தின் தலைவராக டிரம்ப் இருப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மறுபுறம், அமைதி வாரியத்தில் சேர டிரம்பிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
News January 19, 2026
சச்சின் சாதனையை முறியடித்த கோலி

அதிக இடங்களில் சதமடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 35 வெவ்வேறு மைதானங்களில் சதமடித்து, சச்சினின் சாதனையை (34) முறியடித்துள்ளார். ரோஹித்(26), பாண்டிங்(21) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். இதேபோல், நியூசிலாந்துக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். கோலிக்கு(10) அடுத்தபடியாக காலிஸ்(9), ஜோ ரூட்(9), சச்சின்(9) ஆகியோர் உள்ளனர்.
News January 19, 2026
கஞ்சாவால் திணறும் தமிழகம்: நயினார்

போதைக் கும்பல்களின் அட்டூழியத்தால் தமிழக மக்கள் நடமாடவே பயப்படுவதாக நயினார் சாடியுள்ளார். தனது X பதிவில், திருவள்ளூரில் போதைக் கும்பலின் தாக்குதலால் 2 இளைஞர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். DMK ஆட்சியில் போதை பேய் தலைவிரித்து ஆடுவதாகவும், போதைப் பொருள்கள் மயமான CM ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து TN தனது சுயத்தை மீட்டெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.


