News June 18, 2024
3 குற்றவியல் சட்டங்களை நிறுத்த கோரி ஸ்டாலின் கடிதம்

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய சட்டம் ஆகிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என அமித் ஷாவிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சட்டங்கள் அனைத்தும், சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன; சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசமைப்பு 348 பிரிவை மீறுவதாகும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 31, 2026
சிவகங்கை : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

சிவகங்கை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1. இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News March 31, 2026
விஜய் Vs உதயநிதி… பாதுகாப்பில் பாரபட்சமா?

விஜய்யின் கொளத்தூர் பிரசாரத்தில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பு EC-யிடம் புகார் அளித்துள்ளது. அதற்கு பதிலடியாக திருவண்ணாமலையில் பெரும் கூட்டத்திற்கு நடுவே DCM உதயநிதி பிரசாரம் செய்ததை திமுகவினர் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் இருவரின் பிரசார வாகனங்களின் முன் நிற்கும் போலீசாரின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, இதுதான் சமமான பாதுகாப்பா என தவெகவினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
News March 31, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை (ஏப்.1) தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.


