News October 24, 2024
மணல் மூட்டைகள் கடத்திய 3 பேர் கைது

காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் இன்று சிறுகாட்டூரில் உள்ள ராஜன் வாய்க்கால் கொள்ளிடக்கரையோரம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகள் கடத்தி வந்த அல்லியூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (38), ஆச்சாள்புரம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் (28), கருணாகர நல்லூரை சேர்ந்த முருகன் (34) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News January 17, 2026
கடலூரில் 24 சதவீதம் மழை குறைவு!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் (ஜன.1) முதல் இன்று (ஜன.17) வரை இயல்பாக 21.1 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 16 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் இயல்பை விட 24 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.
News January 17, 2026
கடலூர்: சகல பாக்கியங்களை அருளும் காளி!

சிதம்பரத்தில் 1000 ஆண்டுகள் பழமையான தில்லை காளி கோயில் அமைந்துள்ளது. பார்வதியின் மீது கோபமுற்ற சிவன் கோர முகம் கொண்ட காளியாக மாற சாபமிட்டார். பின்னர் இருவருக்கு நடந்த நடன போட்டியில் தோல்வியடைந்த காளி, இப்பகுதியை வந்தடைந்தார். முற்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்கள் காளியை வணங்கி விட்டு சென்றனர் என்பது, பக்தர்கள் காளியை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும் இப்பகுதி மக்களின் ஐதீகம். SHARE IT.
News January 17, 2026
கடலூர்: ரேஷன் கார்டில் எளிதாக மாற்றலாம்!

கடலூர் மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாற்றவும் அல்லது வேறு எண் சேர்க்கவும் இனி அரசு அலுவலங்களுக்கு அலைய வேண்டியதில்லை. சுலபமாக நீங்களே பண்ணலாம். அதற்கு.
1. இங்கு <
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்
6. மேலும் தகவல்களுக்கு: 1800-425-5901
இதை SHARE பண்ணுங்க.!


