News August 14, 2024
புதிதாக 3 நகராட்சிகள் உதயம்

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாவதற்கான தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. இதனையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.
Similar News
News November 23, 2025
தங்கத்தில் வார்த்த சிலை ராஷி கண்ணா

இந்திய அளவில் பிரபலமான ராஷி கண்ணா, ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘அரண்மணை 3’ படத்தில் வரும் ‘அச்சோ அச்சோ அச்சச்சோ’ பாடலில் கிளாமர் காட்டி பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸானார். அவர் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இளசுகளின் மனங்களை கவர்ந்திழுத்துள்ளது. சேலைகட்டிய தங்க தேவதையாக ஜொலிக்கும் ராஷி கண்ணாவுக்கு இன்ஸ்டாவில் ரசிகர்கள் ஹார்ட்டின்களை அள்ளிவிடுகின்றனர்.
News November 23, 2025
இந்தியாவுடன் கூட்டமைப்பை உருவாக்கிய ஆஸி, கனடா

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து, தொழில்நுட்பம் மற்றும் புதுமை கூட்டமைப்பை (ACITI) உருவாக்கியுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில், 3 நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இந்த கூட்டமைப்பு வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதிலும் இணைந்து செயலாற்ற உள்ளனர்
News November 23, 2025
உசைன் போல்ட் பொன்மொழிகள்

*உங்களுக்கென்று ஒரு வரம்பை நீங்களே அமைக்க வேண்டாம். *உங்கள் ஆளுமை வெளிப்படும் போது தான் உங்களை யார் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள் *உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். *மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.


