News August 14, 2024

புதிதாக 3 நகராட்சிகள் உதயம்

image

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாவதற்கான தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. இதனையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.

Similar News

News December 1, 2025

இதையெல்லாம் டிரை பண்ணுங்க.. ஜாலியா இருங்க

image

காலை எழுந்திருப்பது முதல் இரவு தூங்கும் வரை, சில எளிமையான செயல்கள், உடலுக்கு மிகப்பெரிய நிம்மதியான உணர்வை உருவாக்கும். அந்த சிறிய பழக்கவழக்கங்கள் நமது அன்றாட வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 1, 2025

இந்தியா – ரஷ்யா இடையே ஆயுத ஒப்பந்தம்

image

ரஷ்ய அதிபர் புடின் வரும் 4, 5-ம் தேதிகளில் இந்தியா வருகை தர உள்ளார். அப்போது, ஆயுத கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவின் S-57 போர் விமானங்கள் மற்றும் S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவது தொடர்பாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நவீன தளவாடங்கள் இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News December 1, 2025

இனி இந்த பொருள்களின் விலை உயரும்!

image

இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில், வரி சீர்திருத்தம் தொடர்பான 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பான் மசாலா மீதான வரி உயர்த்தப்படலாம். இதனால் இப்பொருள்கள் விலையேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர காஃபின் கலந்த குளிர்பானங்கள், தனி விமானங்களுக்கான வரியும் உயர்த்தப்பட உள்ளதாம்.

error: Content is protected !!