News August 14, 2024

புதிதாக 3 நகராட்சிகள் உதயம்

image

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாவதற்கான தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. இதனையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.

Similar News

News November 20, 2025

Cinema Roundup: ரஜினி படத்தில் இணைந்த அபேக்‌ஷா போர்வால்

image

*ஜித்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’ பட ஷூட்டிங் வரும் டிச., 8-ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது. *9 படங்களில் நடித்து கொண்டு பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. *‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் ஒருவாரம் (டிச.12) தள்ளிப்போவதாக தகவல். *‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் தாமதமான நிலையில், வரும் 28-ம் தேதி வெளியாவதாக அறிவிப்பு. *’ஜெயிலர் 2’ படத்தில் இந்தி நடிகை அபேக்‌ஷா போர்வால் நடிக்க உள்ளதாக தகவல்.

News November 20, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசாக ₹5,000? புதிய தகவல்

image

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிஹார் தேர்தலில், மகளிருக்கு தலா ₹10,000 வழங்கிய அரசின் திட்டம் NDA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், 2026 பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு திமுக அரசும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், நிதி சூழலை அறிய அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.

News November 20, 2025

இந்தியா போரில் இறங்கலாம்: பாகிஸ்தான் அமைச்சர்

image

பாக்., மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். எல்லைகளில் ஊடுருவியோ (அ) ஆப்கனில் இருந்தோ தாக்கலாம், முழுமையான போரில் கூட ஈடுபடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், தாங்கள் எப்போதும் அலர்ட்டாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி ம்ன்ம்ன்

error: Content is protected !!