News August 14, 2024
புதிதாக 3 நகராட்சிகள் உதயம்

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாவதற்கான தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. இதனையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.
Similar News
News November 16, 2025
தேவதை வம்சம் நீயோ! தேனிலா அம்சம் நீயோ!

2000-ல் உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா திரையுலகில் அறிமுகமான முதல் படம் எது தெரியுமா? தமிழனில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர், அதன் பிறகே பாலிவுட், கோலிவுட் வரை சென்று குளோபல் ஸ்டாராக உருவெடுத்தார். இந்நிலையில் ‘வாரணாசி’ பட விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை SM-ல் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் நெஞ்சத்தை கிள்ளாதே பாடலை கேட்க தொடங்கிவிட்டனர்.
News November 16, 2025
சீனா – ஜப்பான் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு!

தைவானை தாக்க சீனா முயன்றால் ஜப்பான் ராணுவ ரீதியாக பதிலளிக்கும் என்று, அந்நாட்டு பிரதமர் சனே டகாயிச்சி கூறினார். இதற்கு சீன தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, சீன மக்கள் ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், இருநாடுகளும் உரிமை கோரும் சென்காகு தீவுக்கு கடலோர காவல் படையை சீனா ரோந்துக்கு அனுப்பியுள்ளது. இது இருநாடுகள் இடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
News November 16, 2025
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை.. அறிவித்தது அரசு

பள்ளிகளுக்கு 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. <<18304103>>டிச.10 முதல் 23-ம் தேதி வரை<<>> தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை மாணவர்களுக்கு லீவுதான். இதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் அடங்கும். மொத்தமாக 12 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். வெளியூர் செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.


