News August 14, 2024
புதிதாக 3 நகராட்சிகள் உதயம்

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாவதற்கான தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. இதனையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.
Similar News
News December 6, 2025
AGF-PAK இடையே மீண்டும் வெடித்த மோதல்: 4 பேர் பலி

சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், AGF-PAK இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. எல்லையில் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யார் முதலில் மோதலை தொடங்கியது என்பதில், இருதரப்பும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பொதுமக்களே சிக்கி தவித்து வருகின்றனர்.
News December 6, 2025
செல்போன் ரீசார்ஜ் செலவு குறைந்தது.. HAPPY NEWS

வாடிக்கையாளர்களின் செல்போன் ரீசார்ஜ் செலவை குறைக்கும் வகையில், அசத்தலான ஆஃபரை BSNL கொண்டு வந்துள்ளது. அதாவது, ₹347-க்கு ரீசார்ஜ் செய்தால், 50 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், அன்லிமிட்டெட் கால்ஸ், தினமும் 100 SMS உள்ளிட்ட சேவைகளையும் பெறலாம். ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நெட்வொர்க்குகளில் இந்த சேவைகளை பெற ₹500 வரை செலவிட வேண்டி இருக்கும். SHARE IT.
News December 6, 2025
நாஞ்சில் சம்பத்துக்கு முக்கிய பதவி வழங்கிய விஜய்

தவெகவில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரை செயலாளர் பதவியை விஜய் வழங்கியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான அவர், நம்மோடு பயணிக்க இருப்பது பெருமகிழ்ச்சி என விஜய் தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் ஆனந்துடன் இணைந்து நாஞ்சில் சம்பத் பணியாற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


