News August 30, 2024

நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

image

தாம்பரம் – நாகர்கோவில், நாகர்கோவில் – தாம்பரம் இடையே நெல்லை வழியாக வாரந்திர சிறப்பு ரயில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வரும் வாரந்திர சிறப்பு ரயில், செப்.,1, 8, 15, 22, 29 & அக்., 6, 13, 20, 27 & நவ.,3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் நீடிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News September 9, 2025

துணை ஜனாதிபதிக்கு நயினார் வாழ்த்து

image

பாஜக மாநில தலைவர் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று 15ஆவது குடியரசுத் துணைத் தலைவராக விரைவில் பதவியேற்று மாநிலங்களவையை வழிநடத்த இருக்கும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பைத் தமிழர் அலங்கரிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

News September 9, 2025

நெல்லையில் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் சிறுவர் சிறுமிகள்

image

நெல்லை மாநகர பகுதியில் சமீபகாலமாக சிறுவர், சிறுமிகள் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் அவலம் அதிகரித்துள்ளது. எனவே இந்த சிறுவர்கள் குறித்தான விவரங்களை சேகரித்து இவர்களை கல்வி பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதனை விரைந்து தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

News September 9, 2025

காணொளியில் மாவட்ட செயலாளர் கலந்துரையாடல்

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று (செப்.9) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் இரா. ஆவுடையப்பன் திருநெல்வேலி திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.

error: Content is protected !!