News November 24, 2024
உத்தரப் பிரதேச கலவரத்தில் 3 பேர் பலி

உத்தரப் பிரதேச கலவரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். சம்பலில் உள்ள பழமையான மசூதி, இந்து கோயில் மீது கட்டப்பட்டு இருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு உள்ளது. இதில் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றபோது, அப்பகுதியினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. 30 போலீசாரும் காயமடைந்தனர்.
Similar News
News September 18, 2025
செப்டம்பர் 18: வரலாற்றில் இன்று

*உலக நீர் கண்காணிப்பு நாள். *1924 – மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 1945 – ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் உயிரிழந்தநாள். *1948 – ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்திய யூனியன் தனது ராணுவ நடவடிக்கையை கைவிட்டது. *2016 – ஜம்மு காஷ்மீரில் யூரி பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
News September 18, 2025
GST 2.0: வாகன உதிரிபாகங்கள் விலையும் குறைகிறது

GST 2.0 எதிரொலியாக வாகனங்கள், டிவிக்கள் விலை குறைந்த நிலையில், தற்போது வாகன உதிரிபாகங்களின் விலையும் குறைந்துள்ளது. ஆமாம், அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகள் வாகனங்களின் டயர்கள் ₹300 முதல் ₹1,500, டிரக், லாரி, பஸ்களின் டயர்கள் ₹2,000 வரையிலும் குறைகின்றன. இதனால், வணிக வாகன உரிமையாளர்கள், விவசாயிகள், பைக் ஓட்டிகள் பயனடைவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
News September 18, 2025
ரணகளமாகும் களம்: சூப்பர் 4 சுற்றில் மீண்டும் IND vs PAK !

ஆசிய கோப்பை தொடரில் நேற்றைய UAE உடனான போட்டியில் வென்றதன் மூலம், பாகிஸ்தான் அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், வரும் 21-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ள ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு பாகிஸ்தான் அணி பழிதீர்க்குமா அல்லது இந்திய அணி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.