News November 24, 2024
உத்தரப் பிரதேச கலவரத்தில் 3 பேர் பலி

உத்தரப் பிரதேச கலவரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். சம்பலில் உள்ள பழமையான மசூதி, இந்து கோயில் மீது கட்டப்பட்டு இருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு உள்ளது. இதில் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றபோது, அப்பகுதியினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. 30 போலீசாரும் காயமடைந்தனர்.
Similar News
News October 24, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

கடந்த 2 நாளாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹11,540-க்கும் சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹ 92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News October 24, 2025
கோர விபத்தில் 25 பேர் பலி.. பிரதமர் மோடி இரங்கல்

ஆந்திராவில் சொகுசு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் PMNRF-லிருந்து ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
News October 24, 2025
WORLD CUP: புதிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை

நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக, பிரதிகா ராவல் 122(134) ரன்களை விளாசியது மட்டுமின்றி, 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய பெண்கள் அணிக்காக உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் சதம் & விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை பிரதிகா படைத்துள்ளார். நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இந்திய பெண்கள் அணி, தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


