News April 13, 2025
NIA-விடம் ராணா கேட்ட 3 பொருட்கள்

NIA கஸ்டடியில் இருக்கும் தீவிரவாதி ராணா, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், ஒரு பேனா மற்றும் சில பேப்பர்களை கேட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது. ராணா கோரிய 3 பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை தவிர்த்து வேறு எந்த பொருளையும் அவர் கேட்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ராணா 5 முறை தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Similar News
News December 23, 2025
DC கேப்டனாகிறாரா ஜெமிமா ரோட்ரிக்ஸ்?

WPL-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 சீசன்களாக DC அணிக்காக விளையாடியுள்ள ஜெமிமா 507 ரன்களை எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் WC-ல் ஜெமிமா சிறப்பான பங்காற்றியிருந்தார். 2026, ஜன.9-ல் தொடங்கும் WPL தொடர் பிப்.5-ல் நிறைவடைகிறது. ஜன.10-ல் மும்பை இந்தியன்ஸை DC முதலில் எதிர்கொள்கிறது.
News December 23, 2025
பங்களாதேஷில் நிச்சயம் தேர்தல் நடக்கும்: யூனுஸ்

பங்களாதேஷில் Inquilab Mancha அமைப்பின் தலைவர் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது. இதில் முக்கிய நபர்களும் கொல்லப்பட்டு வருவது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், 2026, பிப்.12-ல் பங்களாதேஷில் பொதுத் தேர்தல் நடக்கும் என முகமது யூனுஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
மாதவனின் போட்டோ, பெயர் பயன்படுத்த தடை

Deep fake மூலம் தனது அடையாளம் தவறாக பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து, டெல்லி HC-ல் மாதவன் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த HC, மாதவனின் பெயர், போட்டோ உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களை அவர் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, நாகர்ஜுனா, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோரும் இதேபோன்ற வழக்கில், தங்களது அனுமதியை பெறாமல் அடையாளங்களை பயன்படுத்த தடை பெற்றுள்ளனர்.


