News April 13, 2025
NIA-விடம் ராணா கேட்ட 3 பொருட்கள்

NIA கஸ்டடியில் இருக்கும் தீவிரவாதி ராணா, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், ஒரு பேனா மற்றும் சில பேப்பர்களை கேட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது. ராணா கோரிய 3 பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை தவிர்த்து வேறு எந்த பொருளையும் அவர் கேட்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ராணா 5 முறை தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Similar News
News December 31, 2025
6 மணி நேரத்தில் ₹2,000.. Incentive வாரி வழங்கும் நிறுவனங்கள்!

வேலை நேரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெலிவரி ஏஜெண்ட்கள் இன்று பந்த் அறிவித்துள்ளனர். ஆனால், புத்தாண்டு இரவில் ஆர்டர்கள் அதிகம் வரும் என்பதால், டெலிவரி நிறுவனங்கள் ஏஜெண்ட்களுக்கு Incentive அறிவித்துள்ளன. இன்று 6 PM – 12 AM வரை ஒவ்வொரு ஆர்டருக்கும் ₹120 – ₹150 என ஒரு நாளில் ₹3,000 வழங்குவதாக ZOMATO-வும், 6 மணி நேரத்திற்கு ₹2,000 வழங்குவதாக Swiggy-யும் தெரிவித்துள்ளன.
News December 31, 2025
பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து ஜன.5-ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், அன்றைய நாளே 3-ம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் & நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புத்தகங்கள் வழங்கப்பட்ட பிறகு அவற்றை ‘Emis’ தளத்தில் பதிவேற்றவும் HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 31, 2025
உலக பேரழிவை ஏற்படுத்திய இந்த நாளை மறக்க முடியுமா?

சரியாக 6 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (2019 டிச.31) சீனாவின் வுகான் மாகாணத்தில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அடையாளம் காணப்படாத நிமோனியா தொற்றால் மக்கள் அதிகளவில் அட்மிட் ஆவதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் கடல்கள், மலைகள், நாடுகளை தாண்டி அந்த தொற்று பரவியது. கோவிட்-19 என பெயர் பரிமாற்றம் பெற்று, உலகம் முழுவதும் எண்ணிலடங்கா உயிர்களை பறித்தது. #Remembering Disaster.


