News April 13, 2025
NIA-விடம் ராணா கேட்ட 3 பொருட்கள்

NIA கஸ்டடியில் இருக்கும் தீவிரவாதி ராணா, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், ஒரு பேனா மற்றும் சில பேப்பர்களை கேட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது. ராணா கோரிய 3 பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை தவிர்த்து வேறு எந்த பொருளையும் அவர் கேட்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ராணா 5 முறை தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Similar News
News December 15, 2025
என்னிடம் ₹150 கோடி தாங்க.. 10 மெஸ்ஸியை உருவாக்குறேன்!

மெஸ்ஸியின் டூருக்காக செலவழித்த பணத்தை தாருங்கள், இந்தியாவுக்காக 10 மெஸ்ஸிகளை உருவாக்கி, WC-ஐ கொண்டு வருவேன் என பஞ்சாப் கால்பந்து இயக்குநர் ரஞ்சித் பஜாஜ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு வெளிநாட்டு ஸ்டார்கள் தேவையில்லை என குறிப்பிட்ட அவர், நாட்டில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த இப்பணத்தை செலவழிக்கலாம் என கூறினார். மெஸ்ஸி டூருக்காக சுமார் ₹150 செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News December 15, 2025
பணத்திற்காக தெலுங்கில் இசையமைக்கின்றனர்: தமன்

தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைப்பதாக கூறியுள்ள தமன், ஆனால் தமிழில் தனக்கு பட வாய்ப்பு கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவில் இருக்கும் ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பிறமொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு படங்களில் வேலை செய்வது விருப்பத்தால் அல்ல, பணத்திற்காக தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 15, 2025
கூட்டணி முடிவு.. அழைப்பு விடுத்தார் பிரேமலதா

கடலூரில் தேமுதிக சார்பில் ஜன.9-ல் ‘மக்கள் உரிமை மீட்பு’ மாநாட்டில் தேமுதிகவினர், பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டில் 2026 தேர்தலுக்கான கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியிட இருப்பதாக தெரிகிறது. மேலும், ஜனவரிக்குள் கூட்டணியை இறுதி செய்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளார்.


