News April 13, 2025
NIA-விடம் ராணா கேட்ட 3 பொருட்கள்

NIA கஸ்டடியில் இருக்கும் தீவிரவாதி ராணா, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், ஒரு பேனா மற்றும் சில பேப்பர்களை கேட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது. ராணா கோரிய 3 பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை தவிர்த்து வேறு எந்த பொருளையும் அவர் கேட்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ராணா 5 முறை தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Similar News
News December 1, 2025
இந்தியாவுக்கு படையெடுக்கும் ஜப்பான் நிறுவனங்கள்!

வளர்ந்து வரும் பொருளாதாரம், குறைந்த கட்டுமான செலவு, அலுவலகங்களின் வாடகை உயர்வால் ஜப்பானின் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. ஜப்பானில் ரியல் எஸ்டேட்டில் 2-4% மட்டுமே லாபம் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் 6-7% வரை லாபம் ஈட்ட முடியும். எனவே, மிட்சுய் ஃபுடோசன், சுமிடோமோ ரியால்டி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் சுமார் ₹60,000 கோடி அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
News December 1, 2025
எங்கு சென்றாலும் இந்தியாவை மறக்காதீங்க: CPR

அடுத்த கூகுள், டெஸ்லா நமது நாட்டில் உருவாக வேண்டும் என VP CPR கூறியுள்ளார். ஹரியானாவின் குருஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், PM மோடி கொண்டுவந்த தேசிய கல்வி கொள்கை இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் & நாகரிகத்தில் வேரூன்றியுள்ளதாக புகழ்ந்துள்ளார். மேலும், இளைஞர்கள் எங்கு சென்றாலும், இந்தியா எப்போதும் இதயத்தில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
அகண்டா-2 டிக்கெட்டை ₹2 லட்சம் கொடுத்து வாங்கிய Fan

டிச.5-ல் அகண்டா 2 வெளியாகவுள்ளதால் உலகளவில் பாலையா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதன் ஒருபகுதியாக ஜெர்மனியை சேர்ந்த பாலையா ரசிகர் ஒருவர் இப்படத்தின் ஒற்றை டிக்கெட்டை ₹2 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அகண்டா 2 படத்தின் Super Fan Ticket-ஐ வேறொருவர் ₹1 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


