News October 19, 2025
படகு விபத்தில் பலியான 3 இந்தியர்கள், 5 பேர் மாயம்

மொசாம்பிக் நாட்டில் உள்ள பெய்ரா துறைமுக பகுதியில், ஊழியர்கள் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 14 இந்தியர்கள் இருந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் பெய்ரா நகரில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 19, 2025
உங்களுக்கு இப்படி ஒரு பயம் இருக்கா?

பொதுவாக வெளியில் தைரியமான நபராக காட்டி கொள்ளும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். அதுவே அதீத அச்ச உணர்வாக இருப்பதை ஆங்கிலத்தில் போபியா என்று கூறுகின்றனர். இந்த தொகுப்பில் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத போபியாக்களை பற்றி குறிப்பிட்டுள்ளோம். போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு எதை கண்டால் பயம் என்று கமெண்ட் பண்ணுங்க. SHARE.
News October 19, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

தீபாவளிக்கு பிறகு தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார். அதற்கான பணிகளை தீவிரப்படுத்த தவெக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளி முடிந்ததும் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, அவரது பரப்புரை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News October 19, 2025
மதியத்திற்கு மேல்… வந்தது புதிய எச்சரிக்கை

30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, திருப்பூர், கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல்லில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.